கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். எனது பெயர் Sajina Harvey. நாங்கள் சென்னையில் வசித்து வருகிறோம். எங்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது (2019 October). 2020 may மாதம் conceive ஆனேன். இரண்டு மாதங்களில் abortion ஆயிடுச்சு. மன வருத்தத்துக்கு உள்ளானேன். அப்பொழுது தான் உங்களுடைய JASJEMI YouTube channel ல் “வாக்குத்தத்தத்தை சுதந்தரித்துக் கொள்வது எப்படி” என்ற வீடியோவை பார்த்தேன். அந்த வீடியோவின் மூலமாக கர்த்தர் என்னோடு பேசினார். அதற்கு முன்பாக எனக்கு, வாக்குதத்தம் என்பது என்ன? வாக்குத்தத்ததை வைத்து ஜெபிப்பது எப்படி? என்பதெல்லாம் தெரியாது. உங்கள் வீடியோவின் மூலமாக வாக்குத்தத்தத்தின் மேல் ஒரு வாஞ்சையை கர்த்தர் எனக்கு கொடுத்தார். 2021-ல் ஜனவரி மாதத்தில்( உபாகமம் 30:9) அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருக ஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும், உனக்கு பரிபூரணம் உண்டாக செய்வார். என்ற வாக்குத்தத்தத்தை தேவன் எனக்கு கொடுத்தார். நானும் இந்த வாக்குத்தத்தத்தை வைத்து ஜெபிக்க ஆரம்பித்தேன். சில சமயங்களில் எனக்குள் பயம் வந்தது.எனக்கு குழந்தை பிறக்குமா என்ற பயம். அப்பொழுது நீங்கள் அனுதினம் whatsapp ல் அனுப்பும் வார்த்தையின் மூலமாக கர்த்தர் என்னோடு பேசினார். (ஆதியாகமம் 28:15) “நான் உனக்குச் சொன்னதை செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை” என்றும், (எரேமியா 1:12) “என் வார்த்தையை தீவிரமாய் நிறைவேற்றுவேன்” என்றும், (ஆதியாகமம் 28:15) “தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார்” என்று எல்லாம் வசனங்களின் மூலமாக பேசினார். நானும் தேவன் எனக்கு கொடுத்த வார்த்தைகளை வைத்து இன்னும் விசுவாசமாக ஜெபிக்க ஆரம்பித்தேன். 2021 ஏப்ரல் மாதம் நான் கர்ப்பம் ஆனேன். 2021 November 20 அன்று சுக பிரசவத்தில் கர்த்தர் எனக்கு அழகான ஒரு ஆண் குழந்தையை கொடுத்தார். கர்த்தருக்கு கோடான கோடி நன்றி. கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக. உங்கள் (JASJEMI) Youtube Channel ல் போடும் வீடியோக்கள் அனைத்தும் பிரயோஜனமாக உள்ளது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆமென்.
|
|
|