கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. என்னுடைய பெயர் இம்மானுவேல் நான் 7 மாத குழந்தையாய் வயிற்றில் இருக்கும் போது என்னுடைய போதகர் மூலமாக இந்த பெயர் கொடுக்கப்பட்டது. நான் கரூரில் வசித்துவருகிறேன். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்துவந்தேன்., நான் உன்னை குணமாக்குவேன் என்று ஆண்டவர் திட்டமும் தெளிவுமாய் பேசினார். ஆனால் 9 மாதங்களாகியும் எந்த ஒரு முன்னேற்றமும் எனது சரீரத்தில் காணவில்லை. அந்த நேரத்தில் தான் JASJEMI யூடியூப் மூலமாக அடையாளம் கேட்டு தேவ சமூகத்தில் ஜெபிக்கலாம் என்ற தலைப்பில் நிகழ்ச்சியை பார்த்தேன். அன்றில் இருந்து நானும் 21 நாட்கள் உபவாசம் பண்ணி அடையாளம் கேட்டு தேவசமூகத்தில் அமர்ந்து ஜெபிக்க ஆரம்பித்து 10 வது நாள்தான் ஆச்சு. 10 மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நான் இன்று கரூர் to ஈரோடு வரைக்கும் இருசக்கர வாகனத்தின் மூலமாக போய் திரும்பி வருவதற்கு கிருபை கொடுத்தார். கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம். 10 நாட்கள் தான் ஆனது நல்ல ஒரு விடுதலையை ஆண்டவர் கொடுத்தார். இப்பொழுது நடக்கவும், வண்டி ஓட்டவும் ஆண்டவர் பெலன் கொடுத்தார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
Hi sister my name sindhuja in Coimbatore na Jesus kitta rompa close aganum holy spirit lifela valaramum yan family la naa mattumtha ratsikkappattu erukan pls pray for me