சுபா. (நெல்லை)

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்.

என் பெயர் சுபா. (நெல்லை) எனக்கு திருமணம் ஆகி இரண்டு மாதம் தான் ஆகிறது. ஆனாலும் பலவித பிரச்சனைகள், போராட்டங்கள் வந்தது புதுமுகம், புது இடம், புதிய நபர்கள், எனக்கு புரிந்து கொள்ள கஷ்டமாக இருந்தது. எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், என் அம்மா வீட்டில் என்னை கொண்டு வந்துவிட்டார்கள்.
என்னுடைய கணவருக்கு என் அம்மா வீட்டில் என்னை கொண்டுவிட இஷ்டம் இல்லை. ஆனாலும் என்னுடைய வற்புறுத்தலால் என்னை கொண்டு வந்துவிட்டார். தொடர்ந்து ஒரு மாதம் நன்கு பேசினார். கடந்த வாரம் திங்கள்கிழமை என் கணவரோடு பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. நான் அதிக கோபத்தோடு பேசிவிட்டேன். அதன் பிறகு என் கணவரிடம் இருந்து ஒரு கால் கூட வரவில்லை. என் இதயமே நொறுங்கியது. என்னால் சரியாக தூங்க முடியவில்லை. நான் போன் செய்து என் கணவர் எடுக்கவில்லை. முற்றிலும் உடைந்து போனேன்.
அதன் பிறகுதான் பிரச்சினை அதிகமானது. எல்லா சொந்தங்களும் என்னை குற்ற படுத்தினார்கள் எனக்கு அவமானமாக இருந்தது. அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி செத்து விடலாம் என்ற நிலைக்கு தள்ளபட்டேன். அப்பொழுதுதான் என் இருதயம் என்னிடம் JASJEMI யூடியூப் சேனல் பார்க்கும்படி சொன்னது.உடனே போன் போன் எடுத்து பார்த்தபோது “சோதனைக் காலத்தில் தப்புவது எப்படி”? என்ற பதிவை பார்த்தேன். அதன் பிறகு ஜெபம் செய்தேன். கர்த்தருடைய ஆவியானவர் என் மேல் அசைவாடிக் வார்த்தையை தந்தார். அதன் பிறகுதான் எனக்கு விடுதலையாக இருந்தது. தற்கொலை எண்ணம் என்னை விட்டு நீங்கியது. விடுதலை தந்த தேவனுக்கு நன்றி. அந்த வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கர்த்தரே என் சூழ்நிலையை புரிந்து அப்படியே பேசினார். நான் வீடியோ முழுவதும் அழுது கொண்டே பார்த்தேன். ஒரு நாள் JASJEMI யூடியூப் சேனலில் ஜெபக்குறிப்புகளை என் போனில் பார்த்தேன்., உடனே தொடர்பு கொண்டு பேசினேன். பேசும் போது அவர் நல்ல ஒரு தேவ மனிதன் என்று நான் உணர்ந்து கொண்டேன். என் மனபாரம் புரிந்து தன் தகப்பன் போல எனக்கு ஆலோசனையும் தந்தார்கள். தொடர்ந்து கர்த்தருடைய வார்த்தையும் தந்தார்கள். அந்த வார்த்தை எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. மரித்துப்போன என் ஆத்துமாவுக்கு உயிர் வந்தது போலிருந்தது., எனக்காக ஜெபித்து கர்த்தருடைய வார்த்தையை தந்த உங்களுக்கும் உங்களுக்கும் குடும்பத்திற்கும் நன்றி. என் கணவர் 5 நாள் கழித்து தான் என்னை தொடர்பு கொண்டார். எனக்காக ஜெபித்த அன்றைய தினமே என் கணவர் என்னோடு பேசினார். கர்த்தர் அன்பு பிள்ளைகள் மூலமாக என் காயங்களை கட்டினார். நன்றி ஆண்டவரே. என் வாழ்வில் அற்புதம் செய்த இயேசு அப்பாவுக்கு கோடி கோடி நன்றி. என் கணவர் என்னை விட்டு பிரிந்து விடுவாரோ என்ற பயத்தில் இருந்தேன். ஆனால் அந்த பயத்தை மாற்றி என் வாழ்வில் சந்தோஷம் தந்த இயேசு அப்பாவுக்கு நன்றி. “காரியம் மாறுதலாய் முடிந்தது” என்ற வார்த்தையை என் வாழ்வில் நிறைவேற்றிவிட்டார். கர்த்தர் தாமே உங்களையும், உங்கள் ஊழியத்தையும், உங்கள் குடும்பத்தையும், ஆசீர்வதித்து கோடி மடங்கு பெருகச் செய்வாராக., ஆமென்.

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

3 thoughts on “சுபா. (நெல்லை)

  1. என்னால் ஜெபிக்க முடியல. ஆவிக்குரிய வாழ்வில் சோர்ந்து போய் விட்டேன் எப்படி மறுபடியும் பெலனடைவது

Leave a Reply

Your email address will not be published.