Testimony

மிதுனா., இலங்கை

என் பெயர் மிதுனா., நான் இலங்கையில் வசிக்கிறேன். நான் இந்து மதத்திலிருந்து இரட்சிக்கப்பட்டு, தேவனுடைய ஆலயத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். என்னுடைய மகன் அதிகமான குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலையாகாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தான். நான் JASJEMI யூடூப் சேனலை பார்த்தேன். அதில் கொடுக்கப்பட்ட நம்பரை எடுத்து பாஸ்டர் சுந்தர் சிங் ஐயா அவர்களிடம் பேசினேன். எனக்கு சில ஆலோசனை வழங்கி என்னையும் ஜெபிக்க சொன்னார்கள்., நானும் ஜெபித்தேன்., அவர்களும் என் மகனுக்காக தொடர்ந்து ஜெபித்தார்கள்.அப்பொழுது ஆண்டவர் பெரிய ஆச்சரியமாக கடந்த […]

ஜென்சி ரூத். மதுரை

என் பெயர் ஜென்சி ரூத். மதுரை மாவட்டம்., என் கணவர் பெயர் ஜான்சன். எங்களுடைய திருமணம் 2018 ஜூன் மாதம் 15ஆம் தேதி நடந்தது. எங்களுக்கு குழந்தை பாக்கியம் 6 வருடங்களாக இல்லை. JASJEMI Youtube சேனல் மூலம் ஜெப விண்ணப்பத்திற்காக கொடுக்கப்பட்ட நம்பரை எடுத்து போன் செய்து பாஸ்டரிடம் பேசினேன். பாஸ்டர் ஜெபித்து நிறைய ஆலோசனை கொடுத்தார். ஏசாயா புஸ்தகம் மட்டும் திரும்பத் திரும்ப படிக்கச் சொன்னார். அந்த ஏசாயா புஸ்தகத்திலிருந்து நான் கேட்ட கேள்விகளுக்கு […]

பவித்ரா., (எ) எஸ்தர் ஜெசிக்கா., திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை.

என் பெயர் பவித்ரா., (எ) எஸ்தர் ஜெசிக்கா., திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டையில் வசிக்கிறேன். ஆறு மாதத்திற்கு முன்பு என் சபையில் என்னை குறித்து தவறான பழி ஒன்று வந்தது. நான் பாஸ்டர் சுந்தர் சிங் ஐயாவிடம் தொலைபேசியில் இதற்காக ஜெபிக்குமாறு கேட்டுக்கொண்டேன். தேவன் அதை அற்புதமாய் மாறுதலாய் முடிய பண்ணி சத்துருக்களை வெட்கப்படுத்தும்படி என் குடும்பத்திற்கு இரட்சிப்பை கொடுத்தார். துக்கம் நீங்கி சந்தோஷமாய் இருக்கிறோம். யார் என் மீது பொய்யான வார்த்தையை சொன்னார்களோ அவர்கள் வாயாலே கர்த்தர் […]

ஸ்டெல்லா., திருச்சி.

என் பெயர் ஸ்டெல்லா., நான் திருச்சியில் வசிக்கிறேன். தேவன் JASJEMI யூடூப் சேனல் மூலமாக நிறைய ஆவிக்குரிய காரியங்களை கற்றுக் கொடுத்துள்ளார். எனக்கு ஆவிக்குரிய வளர்ச்சிக்கு மிகவும் உதவியது. ஒரு முறை இரண்டு முறை அல்ல பல முறைகள் தேவன் JASJEMI சகோதரிகள் மூலமாக பதில் கொடுத்துள்ளார். மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அவர்களை தேவன் நடத்துகிற விதம், தேவன் அவர்களோடு பேசுகிற காரியம் , இவையெல்லாம் என்னையும் ஆண்டவரிடம் நெருங்க வைத்தது. இப்பொழுது தேவன் என்னோடும் பேசுகிறார்.பல […]

ஜெனிபர்., தென்காசி மாவட்டம்., மத்தளம்பாறை.

என் பெயர் ஜெனிபர். நான் தென்காசி மாவட்டம்., மத்தளம்பாறையில் வசிக்கிறேன்., எனக்கு திருமணம் ஆகி 1 வருடம் ஆகிறது. குழந்தை இல்லையென்று மன சோர்வு அடைந்தேன். தொடர்ந்து YOUTUBE-ல் JASJEMI சேனல் பார்ப்பேன். கடந்த பிப்ரவரி மாதம் பாஸ்டர் சுந்தர் சிங் அவர்களை தொடர்பு கொண்டு எனக்காக ஜெபித்து கொள்ளும் படி கேட்டு கொண்டேன். பாஸ்டர் எனக்காக ஜெபித்து “நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி; ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை […]

புஷ்பா., மதுரை மாவட்டம் (ஒத்தக்கடை)

என் பெயர் புஷ்பா., நான் மதுரை மாவட்டம்., ஒத்தக்கடை பகுதியில் வசிக்கிறேன். கர்த்தர் என்னையும் கூட சிறுசாட்சியாய் நிறுத்தியதற்காய் அவரை நன்றியோடு துதிக்கிறேன். ஸ்தோத்தரிக்கிறேன்., எனது குடும்பத்தில் மிகவும் சண்டைகள், பிரச்சனைகள் காணப்பட்டது. குடும்பத்தில் ஒருமன ஐக்கியம் இல்லாமல் இருந்தது., எவ்வளவு நேரம் FREE-யாக இருந்தாலும், வேதம் வாசிக்கவும், ஜெபிக்கவும், நேரமில்லாதது போல இருந்தது. என்ன செய்வது என்று தெரியாத சூழ்நிலையில் இருந்தேன். மனஅழுத்தத்திற்குள் தள்ளப்பட்டேன். அப்பொழுதுதான் JASJEMI யூடுப் சேனலை பார்த்தேன். அவர்களுடைய செய்தியை கேட்பேன். […]

அமலின்.,குவைத்

எனது பெயர் அமலின். குவைத் நாட்டில் வசித்து வருகிறேன். பல வருடங்களாக வேலைக்காக முயற்சி செய்து வந்தேன். பல தடைகள் வந்து கொண்டே இருந்தது. இதனால் மிகுந்த மனவருத்தத்தில் இருந்தேன். இந்நேரத்தில் JASJEMI YOUTUBE மூலம் பாஸ்டர் ஐயாவிடம் தொலைபேசியில் பேசினேன். ஐயா அவர்கள் எனக்காக ஜெபித்து வந்ததோடு ஜெபிப்பது தொடர்பான சில ஆலோசனைகளையும் எனக்கு கூறினார். தேர்வுக்கு விண்ணப்பித்த நாள் முதல் முடிவுகள் வெளியாகும் வரை ஒவ்வொரு நிகழ்வின் போதும் ஐயா அவர்களிடம் தொலைபேசியின் மூலமாக […]

பாட்ரிசியா., சென்னை

என் பெயர் பாட்ரிசியா., நான் சென்னையில் வசிக்கிறேன்., கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கு துதியையும், நன்றியையும் செலுத்தி இந்த சாட்சியை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு வருடமாக என்னுடைய வாழ்க்கை துணைக்காக நான் காத்திருந்தேன். எனது குடும்பத்தில் பொருளாதார பிரச்சனை இருந்தது. தனிமை மற்றும் மனச்சோர்வு காரணமாக நான் மிகவும் அவதிப்பட்டேன். இயேசு முன்செல்கிறார் சபை போதகருக்கு என்னுடைய ஜெப விண்ணப்பங்களை அனுப்பினேன்., நானும் இதற்காக ஜெபித்து வந்தேன். ஆண்டவர் மிகவும் அற்புதமாக எங்கள்  ஜெபத்திற்கு […]

சாந்தி,சென்னை

என் பெயர் சாந்தி, நான் சென்னையில் வசிக்கிறேன்., எனது அரசாங்க வேலையில் மிகவும் கடினமான பிரிவில் பணிசெய்து வந்தேன். ஏறக்குறைய ஒன்றரை வருடம் மிகுந்த மன உளைச்சலோடு இருந்து வந்தேன். வேறு பிரிவிற்கு செல்ல முயற்சித்தும் பயனளிக்கவில்லை. எனவே, 06.01.2023 அன்று எனது பாரங்களை பாஸ்டர் சுந்தர் ஐயாவிற்கு வாட்ஸப் மூலம் தெரிவித்து, ஜெபிக்க வேண்டினேன். அவர்களும் ஜெபித்து, உடனே நானும் ஜெபிக்க சங்கீதம் 37:5 ( உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே […]

மீனாட்சி, தஞ்சாவூர்

என் பெயர் மீனாட்சி., நான் தஞ்சாவூரில் வசிக்கிறேன்., எனது அம்மாவிற்கு தொண்டையில் கட்டி ஒன்று இருந்தது., இரண்டு நாட்கள் முன்பு இரத்த பரிசோதனையில் அது கேன்சர் கட்டி என்று Report வந்தது. அதனால் மிகவும் மனமுடைந்து பாஸ்டர் அவர்களிடம் ஜெபிக்க கூறினேன். நானும், எனது தங்கையும் விசுவாசத்துடன் ஜெபித்து வந்தோம்.  அப்பொழுது கர்த்தர் எங்களிடம் ஏசாயா 41:13 “உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து : பயப்படாதே நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்கிறேன்” என்ற […]