என் பெயர் மீனாட்சி., நான் தஞ்சாவூரில் வசிக்கிறேன்., எனது அம்மாவிற்கு தொண்டையில் கட்டி ஒன்று இருந்தது., இரண்டு நாட்கள் முன்பு இரத்த பரிசோதனையில் அது கேன்சர் கட்டி என்று Report வந்தது. அதனால் மிகவும் மனமுடைந்து பாஸ்டர் அவர்களிடம் ஜெபிக்க கூறினேன். நானும், எனது தங்கையும் விசுவாசத்துடன் ஜெபித்து வந்தோம். அப்பொழுது கர்த்தர் எங்களிடம் ஏசாயா 41:13 “உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து : பயப்படாதே நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்கிறேன்” என்ற வாக்குதத்தம் மூலம் எங்களிடம் பேசினார். அந்த வார்த்தையை சொல்லி எங்களை திடப்படுத்தி கொண்டே ஜெபித்து வந்தோம். இன்று (27-03-2024) அந்த Report-யும் அம்மா வையும் மருத்துவர் இடம் நேரடியாக காண்பித்த போது அங்கு கட்டியே இல்லை என்றும் இதற்க்கு எந்த மருந்தும் தேவை இல்லை என்றும் கூறினார். இப்படி ஒரு அதிசயத்தை நடத்தி கொடுத்த கர்த்தருக்கு நன்றி கூறி சாட்சி சொல்கிறோம். எங்களுக்கு வழி காட்டிய பாஸ்டர் சுந்தர் சிங் அவர்களுக்கும் நன்றி., ஆமென்.