என் பெயர் சாந்தி, நான் சென்னையில் வசிக்கிறேன்., எனது அரசாங்க வேலையில் மிகவும் கடினமான பிரிவில் பணிசெய்து வந்தேன். ஏறக்குறைய ஒன்றரை வருடம் மிகுந்த மன உளைச்சலோடு இருந்து வந்தேன். வேறு பிரிவிற்கு செல்ல முயற்சித்தும் பயனளிக்கவில்லை. எனவே, 06.01.2023 அன்று எனது பாரங்களை பாஸ்டர் சுந்தர் ஐயாவிற்கு வாட்ஸப் மூலம் தெரிவித்து, ஜெபிக்க வேண்டினேன். அவர்களும் ஜெபித்து, உடனே நானும் ஜெபிக்க சங்கீதம் 37:5 ( உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்) என்ற வசனம் அனுப்பினார்கள். நானும் இந்த வசனத்தை எனது பணி நேரத்தில், அலுவலக கோப்புகளின்மேல் கை வைத்து ஜெபித்தேன். மிகவும் ஆச்சரியாக, ஒரே மாதத்தில் 10.02.2023 அன்று எந்த தடைகளும் இல்லாமல் வேறு பிரிவிற்குச் சென்று பணிபுரிய அமர்த்தப்பட்டேன். எனக்காக ஜெபித்த இயேசு முன் செல்கிறார் ஊழியத்தின் பாஸ்டர் சுந்தர் ஐயா மற்றும் குடும்பத்திற்கு நன்றி செலுத்துகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமம் மட்டுமே மகிமைப்படுவதாக ஆமென்.