என் பெயர் மாரி செல்வி., ஞானஸ்நான பெயர் ரெபேக்காள். (தென்காசி மாவட்டம்)., நான் ஒரு இந்து குடும்பத்தை சேர்ந்தவள். இயேசுவை அறியாதவள். எனக்கு திருமணம் ஆகி ஆறு வருடங்கள் ஆகிறது. எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். எனக்கு திருமணம் ஆகி ஆறு வருடங்களானாலும் எனக்கும் என் கணவருக்கும் இடையே ஒரு புரிதல் இல்லாமல் எப்ப பார்த்தாலும் ஒரே சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருந்தது. சில மாதங்களாக நாங்கள் பிரிந்து இருந்தோம். வாழ்க்கையே வேண்டாம் என்ற எண்ணம் கூட இருந்தது. அப்பொழுதுதான் நாங்கள் எதிர்பாராத நன்மைகள் எங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணியது. என் மாமியார் இரட்சிக்கபட்டவர்கள் அவர்கள் மூலமாக இயேசு முன் செல்கிறார் சபையின் பாஸ்டர். சுந்தர் சிங் மற்றும் பாஸ்டர் அம்மா அவர்களும் எங்கள் வீட்டிற்கு வந்து என் தாயார் மற்றும் எனது குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசி எனக்கும் வாழ்க்கையின் வழிமுறைகளை எடுத்துரைத்து ஒரு ஆலோசனை கூறி என்னையும், என் கணவரையும் சேர்த்து வைத்தார்கள். இதன் மூலம் நான் தொடர்ந்து சபையில் நடக்கும் எல்லா ஆராதனையில் தவறாமல் கலந்து கொண்டு ஆண்டவருடைய வார்த்தைகளை கேட்டு எங்கள் வாழ்க்கையில் அதன்படி நடந்து வருகிறோம். அதில் ஒரு பெரிய மாற்றம் உண்டானது. அதன் பிறகு நானும் என் கணவரும் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டோம். எங்கள் இயேசு முன் செல்கிறார் சபையில் கடந்த இரண்டு மாதங்களாக அபிஷேக ஆராதனை கூட்டம் நடைபெற்றது. அதில் நாங்களும் கலந்து கொண்டோம். ஆனால், எங்களுக்கு அபிஷேகம் கிடைக்கவே இல்லை. எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. மீண்டும் நம்பிக்கையோடு இந்த மாதம் நடந்த அபிஷேக ஆராதனையில் நான் வாஞ்சையோடு கலந்து கொண்டேன். ஆண்டவர் என் ஜெபத்தை கேட்டார். கர்த்தருடைய பெரிதான கிருபையால் அபிஷேகத்தை நான் பெற்றுக் கொண்டேன். அதனால் நானும், என் பிள்ளைகளும், குடும்பமும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறோம். என் குடும்பத்திற்காக ஜெபித்த பாஸ்டர்.சுந்தர் சிங் அவர்களுக்கும், பாஸ்டர் குடும்பத்திற்கும், ஜெப குழுவினர்களுக்கும் நன்றி. எங்களை மாற்றின என் தேவாதி தேவனுக்கு கோடி நன்றிகள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.