பிரியா., நெல்லை

என் பெயர் பிரியா., நான் நெல்லையில் வசிக்கிறேன். என்னுடைய திருமணத்திற்காக 2017 இல் இருந்து 2022 வரை 6 வருடங்களாக எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் வரன் தேடிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அநேக தடைகள் இருந்தது. நான் ஆறு வருடமாக எனக்கு ஏன் இந்த கஷ்டங்கள் என்று நான் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் ஜெபித்துக் கொண்டிருந்தேன். 2020ல் கொரோனா நேரத்தில் JASJEMI யூடூப் சேனலை பார்ப்பேன். அதில் அனேக வார்த்தைகள் சகோதரிகள் மூலமாக இயேசப்பா என் கூட பேசுகிற மாதிரியே இருக்கும். 2021 மார்ச் 18ம் தேதி தொலைபேசி மூலம் பாஸ்டர் சுந்தர்சிங் அப்பாவிடம் பேசினேன். அப்பொழுது உங்களுக்காக தினமும் நான் ஜெபிக்கிறேன் என்று கூறினார். மாப்பிள்ளை வீட்டார் சிலர் வரும் பொழுது அதை அடிக்கடி நான் போதகர் ஐயாவிடம் தெரிவித்துக் கொண்டு வந்தேன். உனக்கு ஒரு நல்ல வரனை இயேசு கிறிஸ்து தருவார் என்று கூறினார். சொன்ன மாதிரியே 11.11.2022 அன்று நல்லபடியாக எனக்கு திருமணம் நடந்தது. ஒரு நல்ல வாழ்க்கையை தேவன் எனக்கு கிருபையாய் தந்தார். எனக்கு குழந்தை கிடைக்க தாமதமாகிக் கொண்டிருந்தது., அதை பாஸ்டர் ஐயாவிடம் கூறினேன். அவரும் எனக்காக ஜெபிக்கிறேன் மனம் தளராதே என்று சொன்னார்., சொன்ன மாதிரியே எனக்கு குழந்தை கரு உண்டாகியுள்ளது.  இரண்டு மாதத்திற்கான கரு வளர்ச்சி நல்ல இருக்குன்னு ஸ்கேன் மூலமாக டாக்டர் சொன்னார்கள். இது வரை என்னை நடத்தின என் தேவன் இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி., எனக்காக ஜெபித்த போதகர் ஐயாவிற்கு நன்றி. JASJEMI யூடூப் சேனலுக்கு நன்றி., சகோதரிகளுக்கு நன்றி., இயேசு முன்செல்கிறார் ஊழியத்திற்கு நன்றி. தொடர்ந்து எனக்காகவும், என் கணவருக்காகவும், என் வயிற்றில் இருக்கும் என் குழந்தைக்காகவும், நல்லபடியாக சுகப்பிரசவம் பெற்று எடுக்க ஆண்டவர் உதவி செய்ய ஜெபித்துக் கொள்ளுங்கள். எல்லா துதி, கனம், மகிமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கே. ஆமென்.

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

Leave a Reply

Your email address will not be published.