என் பெயர் பவித்ரா நான் சென்னையில் வசிக்கிறேன்., நான் கடந்த 27.05.2023 அன்று என் அண்ணனின் மகளுக்கு (வயது நான்கு) திடீரென்று வாய் கோணலாக மாறிவிட்டது. மருத்துவரிடம் பரிசோதனை செய்ததில் அவள் வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டு இருக்கிறாள் என்று கூறினார்கள். அவர்கள் இயேசுவை அறியாதவர்கள். நான் சிறுவயதிலேயே இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டேன். நான் யாரையும் நம்பாமல் இயேசுவை நம்பி ஜெபித்தேன். அப்பொழுது திடீரென பரிசுத்த ஆவியானவர் JASJEMI YouTube ஊழியத்தை பார்க்கும்படி எனக்கு உணர்த்தினார். நான் அவர்களின் youtube-ல் ஆவிக்குரிய வீடியோ எல்லாவற்றையும் பார்ப்பேன்.. ஆவிக்குரிய செய்திகளை கேட்பேன். பரிசுத்த ஆவியானவர் எனக்கு அதன் மூலமாய் நிறைய ஆலோசனை கொடுத்தார். நான் பாஸ்டர் சுந்தர் சிங் ஐயா அவர்களை தொடர்பு கொண்டு என் சூழ்நிலையை கூறி என் அண்ணன் மகளுக்காக ஜெபிக்குமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் எனக்கு ஆலோசனை கொடுத்து ஜெபிக்கிறேன் என்று சொன்னார். நான் ஜெபித்த ஒரே வாரத்தில் பெரிய மாற்றம் எந்த வைரஸும் இல்லை, மூளை பாதிப்பும் இல்லை, குழந்தை வாய் சரியாக விட்டது. குழந்தையோட தாய், தகப்பன் என் இயேசுவிடம் கேட்கவில்லை என்றாலும் என்னுடைய ஜெபத்திற்கும், எனக்காக வேண்டிக்கொண்ட பாஸ்டர் சுந்தர் சிங் ஐயாவின் ஜெபத்திற்கும், பதில் தந்து “எங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றி தந்த எங்கள் தேவன் இயேசு கிறிஸ்துவுக்கு கோடான கோடி நன்றி”.. கர்த்தருடைய நாமம் மட்டுமே மகிமைப்படுவதாக, ஆமென்.