கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக., என் பெயர் எட்வின் சரண்பாபு., என் ஊர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி.. நான் கடந்த 6 வருங்களாக TNPSC Exam தேர்விற்கு படித்து கொண்டிருந்தேன். தொடர்ந்து தோல்வி அடைந்து கொண்டிருந்தேன்.திடிரென்று எங்க அப்பா இறந்துவிட்டார்கள். அடி மேல் அடி, வலி மேல் வலி மிகுந்த துக்கமடைந்தேன். குடும்பத்தில் வறுமை ஒன்றுமே செய்ய முடியவில்லை. நான் போகும் சபையில் எங்க பாஸ்டர் ஐயா சபையில் சொல்லி எனக்கு வேலை கிடைக்க ஜெபிக்க சொன்னார். பிறகு JASJEMI YouTube channel-ல் சகோதரிகள் பேசிய வார்த்தைகளை கேட்டேன். எனக்காக அரசு வேலை கிடைக்க ஜெபியுங்கள் சகோதரிகள் என்று கூறினேன், ஜெபிக்கிறோம் என்று சொன்னார்கள்.. பிறகு வேலை கிடைக்காதவர்களுக்காக ஒரு ஜெப வீடியோவை வெளியிட்டார்கள். அதிலும் நான் பார்த்து ஜெபித்தேன். சகோதரிகளும் ஜெபித்தார்கள்.. இப்போது குரூப் 4 தேர்வில் நான் வெற்றி பெற்று படி ஆணையை பெற்று விட்டேன். தேவன் என்னை வெட்கப்படுத்த விடவில்லை. எனக்காக ஜெபித்த JASJEMI சகோதரிகளுக்கு நன்றி.. அவர்கள் மூலமாய் தேவன் நிறைய தடவை என்னிடம் பேசி இருக்கிறார்.. சகோதரிகளுக்கும், பாஸ்டர் ஐயாக்கும், எங்கள் சபை பாஸ்டர் ஐயாக்கும் நன்றி. “குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும் ஜெயமோ கர்த்தரால் வரும்”. எல்லா கனமும், மகிமையும், துதியும், புகழும் இயேசு ஒருவருக்கே ஆமென்.
தேவன் உங்களை உயர்த்த ஆரமித்துவிட்டார். தேவனுக்கே மகிமை உண்டாவதாக. S