கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக., என்னுடைய பெயர் உமா மகேஸ்வரி., நான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கிறேன். எனக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகிறது. எனக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். இரண்டாவது குழந்தைக்காக நவம்பர் மாதம் (2022) நான் கருவுற்றேன். கடைசி ஸ்கேன் வரைக்கும் குழந்தை நன்றாக இருந்தது. ஆனால் ஒன்பதாம் மாதம் ஸ்கேன் எடுத்துப் பார்த்தபொழுது குழந்தையின் இருதயத்தில் பிரச்சனை இருப்பதாக ரிப்போர்ட் வந்தது. நான் JASJEMI YOUTUBE சேனல் மூலம் பாஸ்டர் ஐயாவிடம் ஜெபிக்குமாறு கேட்டுக் கொண்டேன். அவர்களும் எனக்காக ஜெபித்தார்கள். என்னையும் குழந்தை பரிபூரண சுகத்தோடு தான் பிறக்கும் என்று ஜெபிக்க சொன்னார்கள். அந்த வார்த்தை என்னுடைய விசுவாசத்தை அதிகப்படுத்தியது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அனுதினமும் விசுவாசத்துடன் ஜெபம் செய்தேன். 30-08-2023 அன்று நார்மல் டெலிவரியில் ஒரு ஆண் குழந்தையை நல்ல ஆரோக்கியத்துடன் தேவன் பெற்றெடுக்க கிருபை செய்தார். இருதயத்தில் இருந்த அனைத்து வித பிரச்சனைகளையும் நீக்கி ஆரோக்கியமாக குழந்தை பிறக்கச் செய்தார். ஆண்டவருடைய அளவற்ற கிருபையினால் என் மகன் இப்பொழுது ஆரோக்கியமாக இருக்கிறான். எனக்காகவும், என் மகனுக்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள். இயேசு முன் செல்கிறார் ஊழியத்திற்காக நன்றி.. கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.. ஆமென்