என் பெயர் ஷாலினி., நான் பெங்களூரில் வசிக்கிறேன். என்னுடைய திருமணத்திற்க்காக 2014-ல் இருந்து 2023 வரை ஒன்பது வருடங்களாக எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் வரன் தேடிக் கொண்டிருந்தார்கள். அதில் இரண்டு, மூன்று ok என்று சொல்லி பின்பு மறுபடியும் அது கேன்சல் ஆகிவிட்டது. எனக்கு அநேக தடைகள் இருந்தது. நான் ஒன்பது வருடமாக எனக்கு ஏன் இந்த கஷ்டங்கள் என்று நான் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் ஜெபித்துக் கொண்டிருந்தேன். JASJEMI யூடூப் சேனல்., இயேசு முன் செல்கிறார் ஊழியத்தின் போதகர் சுந்தர் சிங் ஐயாவிடம் கடந்த 14-ஜனவரி-2022-ல் தொலைபேசி மூலமாக பேசினேன். அப்பொழுது உங்களுக்காக தினமும் நான் ஜெபிக்கிறேன் என்று கூறினார். மாப்பிள்ளை வீட்டார் சிலர் வரும்பொழுது அதை அடிக்கடி நான் போதகர் ஐயாவிடம் தெரிவித்துக் கொண்டு வந்தேன். உனக்கு நல்ல ஒரு வரனை இயேசு கிறிஸ்து தருவார் என்று போதகர் ஐயா என்னிடம் கூறினார். அவர் சொன்ன மாதிரி 09 செப்டம்பர்-2023 அன்று நல்லபடியாக எனக்கு திருமணம் நடந்தது. ஒரு நல்ல வாழ்க்கையை தேவன் எனக்கு கிருபையாய் தந்தார். என்னை ஆசீர்வதித்த என் தேவன் இயேசு கிறிஸ்துவிற்கு நன்றி சொல்கிறேன். பாஸ்டர் ஐயாவிற்கும் நான் நன்றி சொல்கிறேன். கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக., ஆமென்.