என் பெயர் ஷெர்லி. நான் பெங்களூரில் வசித்து வருகிறேன். எனக்கு அடிக்கடி வீசிங் (மூச்சுத்திணறல்) பிரச்சனை இருந்து வந்தது. பாஸ்டர் சுந்தர்சிங்கிடம் தொலைபேசி மூலம் பேசியிருந்தேன். அப்போது அவர்கள் கூறிய வார்த்தையை நான் செய்தேன். என்னுடைய பாவ, பழக்க வழக்கங்கள் எல்லாம் அறிக்கை செய்து விட்டு விடுகிறேன் எனக்கு சுகம் கொடுங்க இயேசப்பா என்று. இப்பொழுது நான் ஜெபிக்க, ஜெபிக்க என்னுடைய நோய்களெல்லாம் என்னைவிட்டு முற்றிலும் விலகியது. இப்பொழுது நான் நன்றாக இருக்கிறேன். ஒரு நாள் கூட மாத்திரை இல்லாமல் என்னால் இருக்க முடியாது. ஆனால் கடந்த 15 நாட்களாக நான் எந்த ஒரு மாத்திரையும் எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. 4 வருடமாக இருந்த மூச்சுத்திணறல் பிரச்சனையை ஆண்டவர் முடிவுக்குக் கொண்டுவந்தார்., எனக்கு ஜெபிக்க தெரியாது. ஆண்டவர் கிருபையால் JASJEMI சகோதரிகள் மூலமாக நான் ஜெபிக்க கற்றுக்கொண்டேன். ஆண்டவர் என்னை குணப்படுத்தினதற்காக நான் எப்பொழுதும் அவருக்கு நன்றியுள்ளவளாக இருப்பேன். எனக்காக ஜெபித்த உங்களுக்கும், உங்கள் ஊழியத்திற்கும் நன்றி. கர்த்தருக்கு கோடான கோடி நன்றி., ஆண்டவருடைய பரிசுத்த நாமத்திற்கு மட்டுமே மகிமை உண்டாவதாக., ஆமென்.