என் பெயர் ரோஸ்லின்.,சேலம் மாவட்டம் எடப்பாடி. நான் கத்தோலிக்க குடும்பத்தை சேர்ந்தவள். நான் சத்தியத்தை அறியாமலும், சத்தியத்தின்படி நடக்காமலும் இருந்தேன். அறியாமையிலே அநேக பாவங்கள் செய்து, சொப்பனத்தை கண்டு பயப்படவும் செய்வேன். அந்த சூழ்நிலையில் ஆண்டவர் என்னோடு பேசி திடப்படுத்தினார். அதற்கு பின்பு தான் கடந்த கால lock downல் prayers பார்க்கவும், வேதத்தை வாசிக்கவும் ஆரம்பித்தேன். எனக்குள்ளே பெரிய மனமாற்றம் வந்தது. JASJEMI சகோதரிகள் மூலமாக ஆவிக்குரிய வாழ்க்கையில் அநேக காரியங்களை ஆண்டவர் எனக்கு கற்றுக்கொடுத்தார். பாஸ்டர் சுந்தர்சிங் அவர்களிடம் வீடு கட்டுவதற்கு ரொம்ப நாட்களாக தடையாயிருந்தது., அதற்காக ஜெபிக்க சொல்லியிருந்தேன். இப்போ நல்ல படியாக வீடு கட்ட ஆரம்பித்து விட்டோம். அதற்காக கர்த்தருக்கு கோடா கோடி ஸ்தோத்திரம். எனக்காக ஜெபித்த பாஸ்டர் மற்றும் அவர்கள் ஊழியத்திற்கும் நன்றி. கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக ஆமென்.