கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். என் பெயர் வினோதினி. நான் சென்னையில் வசிக்கிறேன். எனது கணவரின் தங்கை எங்கள் மாமியார் வீட்டில் கீழ் தளத்தில் வீடு கட்டிக் கொண்டார்கள். அதை என்னால் தாங்க முடியாமல் கோபம் கொண்டு அவர்களோடு பேசுவதை நிறுத்தி விட்டேன். நான் ஜெபிக்க கூடியவள் தான் ஆனால் எனக்கு மன அமைதி இல்லாமல் மிகவும் சோர்ந்து போனேன். இந்த வீட்டை விட்டு கணவருடன் சேர்ந்து தனியாக சென்று விடலாம் என்ற எண்ணம் மேலோங்கியது. ஆனால் தேவன் அதற்கு பதில் கொடுக்க வில்லை. என் கணவரிடம் கேட்கவும் தயக்கமாக இருந்தது. மிகவும் குழப்பம் மன கலக்கம் அடைந்தேன். அப்பொழுது தான் உங்கள் “மன்னிப்பதால் வரும் ஆசீர்வாதங்கள்” காணொளியை கண்டேன். தேவன் என்னொடு பேசினார். என்னை ஒப்புக் கொடுத்து அவர்களை மனதார மன்னித்தேன். இப்பொழுது மன அமைதியுடன் மகிழ்ச்சியாக இருக்க கர்த்தர் கிருபை செய்தார். தக்க நேரத்தில் நல்ல ஆலோசனை கொடுத்த தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்! JASJEMI YouTube channel மற்றும் இயேசு முன் செல்கிறார் ஊழியங்களுக்கு மிக்க நன்றி!