என் பெயர் ஷாமா., என் கணவர் பெயர் மெல்வின். நாங்கள் பெங்களூரில் வசிக்கிறோம். எங்களுக்கு 12 வருடங்களாக குழந்தை இல்லை., எனக்கு இரண்டு தடவை கரு கலைந்துள்ளது. அநேக மருத்துவ சிகிச்சை எடுத்து இருந்தோம். எங்களுக்கு எல்லாமே தோல்வியில் தான் முடிந்தது. நாங்கள் தொடந்து ஜெபித்துக்கொண்டிருந்தோம்., அப்போது JASJEMI யூடூப் சேனல் பார்க்க தேவன் கிருபை செய்தார். அநேக சாட்சிகளை பார்த்தோம். நாங்கள் போதகர் அவர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினோம்., தேவனை பாடல் பாடி உயர்த்துங்கள்., ஸ்தோத்திரம் சொல்லுங்கள் என்று எங்களுக்கு ஆலோசனை சொன்னார்கள். எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை 10 பாடல் பாடி, ஸ்தோத்திர பலிகளை செலுத்தி அவரை உயர்த்தி வந்தேன். தேவன் என்னை ஆசீர்வதித்தார். இப்போது நான் மூன்று மாத கர்ப்பமாக உள்ளேன். நான் நல்ல படியாக குழந்தையை பெற்று எடுக்கவும்., இதை குறித்து இருக்கிற பயத்தையும் எடுத்துப்போட தேவன் கிருபை செய்ய எங்களுக்காக தொடர்ந்து ஜெபித்துக்கொள்ளுங்கள். கர்த்தருடைய பரிசுத்த நாமம் மட்டுமே மகிமைப்படுவதாக ஆமென்.