சியாமளா (ஆஸ்திரேலியா).

என்னுடைய பெயர் சியாமளா. நான் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறேன். நான் என்னுடைய சாட்சியை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மகிமைக்காக அர்ப்பணிக்கிறேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நான் வேலை பார்க்கக் கூடிய இடத்தில் எனது நண்பர் மூலமாக அறிந்து கொண்டேன். நான் இயேசுவை பற்றி கற்றுக்கொள்ளவோ எந்த பாதை சரியான பாதை என்று எனக்கு சொல்லி தர யாருமில்லை. அதனால் நான் யூடியூப் இல் கிறிஸ்தவ சேனல்களை பின்பற்றி ஆண்டவரிடம் எப்படி நெருங்குவது, வேதத்தை எப்படி வாசிப்பது, என்பதை கற்றுக் கொண்டேன். யூடியூப் இல் உள்ள வசனங்கள் மற்றும் ஜெபங்கள் கேட்டு என்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்தேன். ஒரு முறை இந்தியாவில் என்னுடைய தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது ஒரு மனிதரையும் அவர் குடும்பத்தையும் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் அவர்களை தீர்க்கதரிசிகள் என்று அழைத்தார்கள். அவர்கள் எங்களுக்காக ஜெபம் பண்ணினார்கள். அவர் எனக்காக தலைமேல் கைவைத்து ஜெபிக்க ஆரம்பித்த போது அவருடைய மனைவி ஒருபுறம் அவர் சொல்லுவதை எழுதிக் கொண்டிருந்தார். அவர் ஜெபித்து கர்த்தர் என்னை நேசிப்பதாகவும், என்னுடைய கண்ணீரெல்லாம் ஒரு துருத்தியில் வைத்திருப்பதாகவும் சொன்னார். இன்னும் நிறைய விஷயங்களை சொன்னார். என்னுடைய குடும்பத்தை பற்றி நிறைய விஷயங்கள் சொன்னார். அதன் பின்பு எனக்கு ஒரு ஆண்குழந்தை கிடைக்கும் என்றும் நாங்கள் ஆஸ்திரேலியாவில் ஒரு வீடு கட்டுவோம் என்றும் சொன்னார். அதன் பின்பு நான் என்னுடைய தினசரி வாழ்க்கையை பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் ஒரு சில நாட்களுக்குப் பின்பு எப்படி என்று தெரியவில்லை திடீரென்று காலையில் எனக்கு அந்த மனிதருடைய ஞாபகமும், அவருடைய குடும்பமும் அவர் சொன்ன எல்லா வார்த்தைகளும் ஞாபகத்தில் வந்தது. அவர் சொன்ன படியே எனக்கும் நடந்தது., ஏனென்றால் அவர் சொன்னபடியே என் வாழ்க்கை எல்லாம் நடந்து இருந்தது. எனக்கு அதே போல் ஒரு பையன் பிறந்தான்., அவர் சொன்னபடியே நாங்கள் அந்த தேசத்திற்கு போய் இருந்தோம். அதனால் நான் மறுபடியும் அவர்களை தொடர்பு கொண்டு பேச நினைத்தேன். அவர்கள் ஆந்திரப்பிரதேசம் கம்மம் பகுதியில் இருக்கிறார்கள். அவருடைய தொலைபேசி நம்பரை பெற்று கொண்டு அவருக்கு நன்றி செலுத்தினேன். அதன் பின்பு மறுபடியும் அவர்கள் எனக்காக குடும்பத்தோடு ஜெபித்தார்கள். என்னால் நம்ப முடியாத நிறைய விஷயங்களை மறுபடியும் என்னிடம் சொன்னார்கள். ஆனாலும் அவர் தேவ மனுஷன் என்பதால் நான் அவர் சொன்ன எல்லாமே உண்மை என்று நம்பினேன். அதிலிருந்து தேவனுடன் உண்டான சமாதானத்தை நான் இழந்தது போன்று உணர்ந்தேன். என்னுடைய மனதில் அமைதி இல்லாதது போலிருந்தது. அவர்கள் அவர்களுடைய ஊழியத்திற்காக என்னிடம் பணம் கேட்க ஆரம்பித்த போது ஏதோ சரியாக இல்லாதது போல் என்னுடைய உள்ளத்தில் உணர்ந்தேன். ஆனாலும் கர்த்தர் வேதத்தில் நம்முடைய சம்பளத்தில் 10% கடவுளுக்கு கொடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்ததால் நான் கொடுக்க ஆரம்பித்தேன்., ஆனாலும் அவர்கள் மறுபடியும் மறுபடியும் இன்னும் நிறைய ஆண்டவருக்கு கொடுத்தால்தான் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் அவர்களிடமிருந்து என்னால் எந்த ஒரு ஆவிக்குரிய அறிவையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்கள் எப்போதுமே பணம், ஐஸ்வரியம், இதைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டே இருந்தார்கள். அது எனக்கு வேதத்துக்கு முரண்பாடாக தெரிந்தது. உதாரணத்துக்கு நான் கிறிஸ்துவை பின்பற்றினால் எனக்கு ஒரு நாளும் கவலையோ, கண்ணீரோ, கஷ்டங்களை, எதுவுமே வராது. நான் வந்து எப்போதுமே சந்தோஷமாக நல்லா திருப்தியாக சாப்பிட்டு நம்முடைய வாழ்க்கையை அனுபவிக்கலாம்., என்பது போன்று சொல்வார்கள். ஆனால் எனக்குள் ஏதோ ஒன்று இது சரியாக தென்படவில்லை. நாம் தவறான நபர்களோடு தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது. அதனால் நான் கர்த்தரிடம் ஜெபிக்க ஆரம்பித்தேன். என்னை சரியான வழியில் நடத்துமாறு ஜெபிக்க ஆரம்பித்தேன். அதன்பின்பு நான் ஜெபம்பண்ணி முடித்தவுடன் JASJEMI யூடியூப் சேனலை நான் பார்த்தபோது “இரட்சிக்கப்பட்ட பின்பு நாம் என்ன செய்ய வேண்டும்”. என்று ஒரு தேவ செய்தி பிப்ரவரி 17, 2021 அன்று வெளியானது, அதில் சகோதரர் அவர்கள் நமக்கும் கடவுளுக்கும் எப்படி உறவு வைத்திருக்க வேண்டும் மற்றும் ஆண்டவர் நம்மை எப்படி அவர் பாதையில் நடத்துவார் என்று பேசினார். எரேமியா 3:15 வசனத்தையும் காண்பித்து, “உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும், புத்தியோடும் மேய்ப்பார்கள்.” என்ற வசனத்தை சொல்லி பேசினார். உடனே நான் பாஸ்டர் சுந்தர்சிங், அவர்களை தொடர்புகொண்டு என்னுடைய இந்தப் பிரச்சினை எல்லாவற்றையும் நான் சொன்னேன். அப்போது அவர் அந்த மனிதனோடு உண்டான எல்லா தொடர்புகளையும் துண்டிக்கும் மாறும் அவருடைய தவறான உபதேசங்கள், மற்றும் பணம் கொடுப்பது , போன்ற காரியங்களை நிறுத்துமாறு எனக்கு வழிகாட்டினார். இந்த ஊழியத்தின் மூலம் கர்த்தர் எனக்கு சரியான நேரத்தில் வழி நடத்தியதற்காக நான் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். இப்போது நான் நன்றாக இருக்கிறேன்., தேவனுடைய நாமம் மட்டுமே மகிமை படுவதாக. ஆமென்..

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

Leave a Reply

Your email address will not be published.