சோனியா (நெய்வேலி)

கர்த்தரின் மேலான நாமத்திற்கு ஸ்தோத்திரம். எனது பெயர் சோனியா.எனது ஊர் நெய்வேலி. எனக்கு திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகின்றன. கர்த்தருடைய கிருபையால் இரண்டு மகன்கள் உள்ளனர். நான் கிறிஸ்தவள். ஆனால், ஆவிக்குரிய சபை சார்ந்தவள் அல்ல. 9 வருடங்களுக்கு முன்பு எனது கல்லூரி பருவத்தில் ஆண்டவர் ஒரு ஜெப கூட்டத்தில் கர்த்தர் என்னை ஆசீர்வதித்து அபிஷேகம் பண்ணி அந்நியபாஷை வரம் தந்தார். ஆனால், எனக்கு அதின் முக்கியத்துவம் மகிமை எதுவும் தெரியாது. அதைப்பற்றி யாரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டேன். ஏனென்றால், என்னை மற்றவர்கள் நான் உளருகிறேன் என்று சொல்லி பரிகாசம் பண்ணுவார்கள் என்று நினைத்தேன். எனது கல்லூரி படிப்பை முடித்தவுடனே எனக்கு திருமணம் முடிந்தது. நான் திருமணம் செய்து கொண்ட குடும்பம் மிகுந்த விக்கிரக ஆராதனை நிறைந்ததாய் இருந்தது. அதில் நான் பின் மாற்றமடைந்து போனேன். ஆண்டவர் எனக்கு கொடுத்த வரத்தை மறந்து போனேன். எனது மாமனார் குறி சொல்பவர். அதனால் கடவுளிடம் நேரடியாக செல்ல தேவையில்லை, இவர் வழியாக கேட்டுக் கொள்ளலாம் என்று எண்ணி மதியீனத்தால் தவறு செய்தேன். எனக்கு திருமணமாகி ஒரு மாதத்தில் எனது மாமனார் இறந்து போனார். அது எனக்கு பேரதிர்ச்சி. இப்படியே எட்டு வருடம் ஆகிவிட்டது. நானும் எனது கணவரும் அவரை தெய்வம் போல் பாவித்து விட்டோம் .கடந்த வருடம் 2020 மே மாதம் ஊரடங்கு தொடங்கிய புதிதில் எனது கல்லூரி தோழி ஒருத்தி என்னிடம் நான் ஆவிக்குரிய சபைக்கு மாறிவிட்டேன், வேதாகமம் வாசி, இயேசப்பா உன்னுடன் பேசுவார் என்று மட்டும் கூறினாள். அவளுக்கு ஆவிக்குரிய சபை கண்டாலே பிடிக்காது. நான் மிகுந்த ஆச்சரியமுற்று வேதாகமத்தை தூசிதட்டி படிக்க ஆரம்பித்தேன். படிக்க படிக்க என்னுடைய பாவங்கள் அனைத்தையும் என் கண்முன் ஆண்டவர் கொண்டு வந்தார். பாரம் தாங்காமல் நான் அழ ஆரம்பித்தேன். அப்பொழுது எனக்கு வேதாகமத்தில் ஆண்டவர் எப்படி பேசுவார்? ஆண்டவர் உண்மையில் யார்? என்று பல கேள்விகள் எழுந்தன. எனக்கு ஜெபம் சொல்ல தெரியாது. எனது நண்பரிடம் பேசுவது போல ஆண்டவரிடம் கேள்விகளை வைப்பேன். ஒருநாள் YouTubeல் JasJemi சேனலை பார்க்க நேர்ந்தது. நான் முதலில் இந்த சின்ன பிள்ளைங்கட்ட நமக்கு தேவையான பதில் எப்படி கிடைக்கும் என்று எண்ணினேன். ஆனால்,அற்பமான ஆரம்பத்தை யார் அசட்டை பண்ணலாம்? என்ற வேத வாக்கியத்தின்படி என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் ஆண்டவர் அவர்கள் மூலமே பதிலளித்தார். அப்பொழுதுதான் எனது அபிஷேகத்தை குறித்தும் அந்நியபாஷை குறித்தும் நினைவுக்கு வந்தது .நான் பேச முயற்சித்தேன் .ஆனால் என்னால் முடியவில்லை. அப்பொழுதுதான் நான் அந்த வரத்தை இழந்தது எனக்கு தெரியவந்தது. நான் தினமும் முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. அப்பொழுதுதான் JasJemi சேனலில் அவர்களது தொடர்பு எண் கொடுக்கப்பட்டது. அந்நியபாஷை குறித்து பாஸ்டர் அப்பாவிடம் (பாஸ்டர்.சுந்தர்சிங்) 17. 7. 2020 அன்று ஆலோசனை பெற்றேன். அப்பொழுது அவர் நீங்கள் தனி ஜெபத்தில் கேளுங்கள் ஆண்டவர் நிச்சயம் தருவார் என்று கூறினார். நானும் அழுது கேட்டேன். ஆனால் கிடைக்கவில்லை. (18. 7 .2020) அன்று காலை என் சொப்பனத்தில் பலத்த குரல் ஒன்று என் பெயரை அழைத்து,” எழுந்து அந்நிய பாஷை பேசத் துவங்கு” என்று சத்தமாக சொல்ல ஆரம்பித்தது. நிறைய சந்தேகம் கேட்டாயே எழுந்து பேசு என்றது. ஆனால், ஏதோ ஒரு பாரம், என்னால் எழ முடியவில்லை. இறுதியாக நான் முயன்று பேச ஆரம்பித்தேன் . நான் இழந்த வரத்தை சொப்பனத்தில் பெற்றேன். திடுக்கிட்டு எழுந்து எனது அறையில் சென்று சொல்ல முயற்சித்தேன் வரவில்லை. ( 20.1. 2020) அன்று JasJemi சேனலில் “அபிஷேகமும் அந்நியபாஷையும்” என்ற தலைப்பில் பேசினார்கள். அந்த வீடியோவில் ஆண்டவர் என்னுடன் இடைப்பட்டார். அன்று மதிய வேளை என்னுடைய கணவர், குழந்தைகள் எல்லோரும் இருந்த சமயம் என்னால் என் கண்ணீரை அடக்க முடியாமல், ஜெபிக்க தனி இடமும் கிடைக்காமல், நான் சமையலறையில் பாத்திரம் கழுவிக் கொண்டு, இயேசப்பா என் உள்ளம் தெரிந்தவர். நீர் என் பாவத்தை மன்னித்து எனக்கு வரத்தை மீண்டும் தாரும் என்று சொல்லி, ஸ்தோத்திரம் சொல்ல ஆரம்பித்தேன். ஆண்டவர் அந்தக்கணமே என் மன்றாட்டைக் ஏற்றுக்கொண்டு என்னை அபிஷேகித்தத்தோடு அந்நியபாஷை வரத்தையும் மீண்டும் கொடுத்தார். கர்த்தரின் நாமத்துக்கு ஸ்தோத்திரம். JasJemi மற்றும் அவர்கள் ஊழியத்தை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக .ஆமென்.

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

Leave a Reply

Your email address will not be published.