Anne Roshini (Germany) Relative name: Antony,Clara,Livin

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம், ஆண்டவர் எங்கள் குடும்பத்தில் ஒரு பெரிய அற்புதத்தை செய்ததும் அன்றி எங்கள் குடும்பங்களை ஜெபிக்கும் பலிபீடங்களாக மாற்றியமைத்துள்ளார், அதற்காக தேவனுக்கு நன்றி. கடந்த ஏப்ரல் 13-ம் தேதியன்று, எனது சித்தப்பா, சித்தி, மற்றும் அவர்களின் மகன் எல்லோருக்குமாக கொரோனா பாசிட்டிவ் வந்தது. எனது சித்தப்பா எலக்சன் டியூட்டி போய் இருந்திருக்கிறார் ஆதலால் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் கூட தொற்று ஏற்பட்டுள்ளது. பயமும் ,பதற்றமும், கொண்டவர்களாக மருத்துவமனையில்அவரை சேர்த்தோம். சித்தப்பா குடும்பம் ஒரு பெயரளவு கிறிஸ்தவர்களாகவே இருந்தனர். நான் உடனே பாஸ்டர் சுந்தர்சிங் அவர்களை வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு ஜெப உதவியை நாடினேன்., அவர்களும் எல்லோருக்காகவும் ஜெபிக்கிறோம் தைரியமாக இருங்கள் என்று கூறினார். நாங்களும் எங்களது குடும்பங்களிலும் தொடர்ந்து ஜெபித்து கொண்டு வந்தோம். மறுதினத்தில் எனது சிறிய தகப்பனார் சுயநினைவு இழந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். மருத்துவர்கள் நரம்பியல் சிகிச்சைக்கான மருத்துவமனையில் அனுமதி கோரினார்கள். நாங்களும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு அவரை டாக்டர்ஸ் சோதித்து பார்த்து இவர் சுய நினைவு திரும்பவே 6 மாதங்கள் ஆகி விடும்., கொரோனா வேறு உள்ளது என சொல்ல கேட்டு மிகவும் கலக்கம் அடைந்தோம்., முதலாவது சித்தப்பாவின் குடும்பத்தின் நிலைமையும் அதற்கான 6 மாதங்கள் செலவுகளை நினைக்கும்போது மனசோர்வும் அடைந்தோம். ஆனாலும் ஜெபிப்பதை நிறுத்தவில்லை, ஒரு சில தினங்களில் தம்பியும், சித்தியும், நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டனர். அதன் பிறகு 4-5 நாட்களில் எனது சிறிய தகப்பனார் கண்களைத் திறந்தார், எனினும் அவரால் நாம் யார், என்ன உறவு என்பதே புரியாத நிலையில் இருந்தார். 6 வாரங்களில் பூரண குணம் பெற்றார் எனது சித்தப்பா இப்பொழுது நலமாக உள்ளார். 6 மாதங்களுக்கு மேல் ஆகலாம் என்ற இடத்தில் 6 வாரங்களில் சுகம் கொடுத்த தேவனுக்கும் இயேசு முன்செல்கிறார் ஊழியர்களுக்கும் கோடான கோடி நன்றிகள். அதன்பிறகு எனது மாமா குடும்பத்தினர் கொரோனா பாசிட்டிவ் வந்தபோது தொடர்புகொண்டு ஜெபிக்க சொன்னேன்., பாஸ்டர் தவறாது ஜெபித்து ஆறுதல் கூறினார். நான் மன உளைச்சலில் இருந்த பல சந்தர்ப்பங்களில் ஆவிகுரிய வழிநடத்துதலை பாஸ்டர் கொடுப்பார். தேவன் இந்த ஊழியத்தை இன்னும் பயன்படுத்துவர் என்று விசுவாசித்து அவரை ஸ்தோத்தரிக்கிறேன். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்..ஆமென்..

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

Leave a Reply

Your email address will not be published.