Jerwin Roy & Sherlin Malar (Nagercoil).

எங்களை சாட்சியாக எழுப்பிய தேவாதி தேவனுக்கு நன்றி ! கர்த்தர் எங்கள் வாழ்வில் பெரிய அதிசயமான காரியங்களை செய்துள்ளார். என் பெயர் Jerwin Roy என் மனைவி பெயர் Sherlin Malar.கர்த்தரின் பெரிதான கிருபையால் என் மனைவி கர்ப்பம் தரித்து இருந்தார்கள். Dec 10,2020 அப்போது மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார்கள்.நாங்கள் ரெகுலராக ஸ்கேன் எடுக்க சென்றோம். அப்போது டாக்டர் சொன்னாங்க குழந்தைக்கு ஒரு வைரஸ் பாதித்து உள்ளது.,அதன் காரணமாக குழந்தையை சுற்றி ஒரு திரவம் போல ஒரு லேயர் இருக்கின்றது.இதை இப்படியே விட்டால் 4,5 மாதங்கள் கழித்து அந்த குழந்தை தானாகவே கரு கலைத்துவிடும் என்றார்கள்.நங்கள் மிகவும் கவலையுற்று எங்களுக்கு தெரிந்த எல்லா ஊழியர்களிடம் சொல்லி ஜெபிக்க சொன்னோம்.நாங்களும் தொடர்ந்து ஜெபித்து வந்தோம்.அதற்கு ஒரு இரண்டு மாதங்களுக்கு முன்பு நாங்கள் யூடூப்பில் Jasjemi சேனல் பார்த்து வந்தோம். எங்கள் ஆவிக்குரிய வாழ்வில் பல சந்தேகங்கள் மற்றும் நிறைய கேள்விகளுக்கு Practical பதில்கள் கிடைத்தது. ஆகவே Dec 12 நாம் அவர்களுக்கு ஒரு ஜெப குறிப்பு அனுப்பலாம் என்று எண்ணி அனுப்பினோம்.அதற்கு பாஸ்டர் சுந்தர் சிங் கர்த்தர் வாலாக்காமல் தலை ஆக்குவார் என்று சொல்லி ஜெபித்தார்கள். நாங்களும் ரெகுலர் ஸ்கேன் செக்கப் போவோம்.அப்போவே நாங்க ஒரு பொருத்தனை பண்ணினோம். Jan 1, 2021 எங்களுக்கு வாக்குத்தத்தம் எசேக்கியேல் 36:11 தந்து இது பெருக்கத்தின் ஆண்டு என்று சொல்லி வாக்குத்தத்தம் தந்தாங்க நாங்களும் தினமும் எங்கள் ஜெபத்தில் இந்த வாக்கு தத்தம் சொல்லி ஜெபம் செய்து வந்தோம்.தினமும் எங்களுக்கு வாக்குத்தத்தம் அனுப்புவாங்க, அது எங்களை விசுவாசத்தில் பெலப்பட செய்தது .Jan 23 ,2021 நாங்கள் ரெகுலராக ஸ்கேன் எடுக்க சென்றோம் Amniocentesis என்ற டெஸ்ட் எடுத்தாங்க, அதற்கு ரிசல்ட் Normal என்று சொன்னார்கள்.ஆனாலும் குழந்தை சுற்றி ஒரு திரவம் போல ஒரு லேயர் இன்னும் இருக்கின்றது என்று சொன்னார்கள். May 31 பாஸ்டர் Titus அவர்கள் எங்களிடம் என் மனைவி மற்றும் குழந்தையை குறித்து விசாரித்தார்கள். அது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் June 3ம் -தேதி எங்களுக்கு Due date தந்தார்கள் என்று சொன்னோம்.ஆனால் June 1ம் -தேதி என் மனைவிக்கு பனி குடம் உடைந்தது, நங்கள் உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். டாக்டர் பார்த்துவிட்டு அதிகாலை 2.30 மணிக்கு Labor ward யில் அனுமதித்தனர்.நான் உடனே Titus பாஸ்டர் இடம் message அனுப்பினேன். அன்று June புது மாதம் வாக்குத்தத்தம் உபாகமம் 5:10 “என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்” . இந்த வசனத்தை வைத்து நான் ஜெபித்தேன். 12+ மணி நேரம் பிறகு மாலை 3.47 மணிக்கு கர்த்தர் ஒரு ஆரோக்கியமான ஆண் குழந்தையை தந்தார். அனைத்து டாக்டர்களும் பார்த்து வியந்தனர், சந்தோஷம் அடைத்தனர்.நாங்கள் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருக்கிறோம்.அற்புதம் செய்த தேவாதி தேவனுக்கு நன்றி. ஜெபித்த பாஸ்டர் சுந்தர் சிங், பாஸ்டர் டைட்டஸ், மற்றும் இயேசு முன் செல்கிறார் ஊழியங்கள் அனைவருக்கும் நன்றி கூறி எங்கள் சாட்சியை முடிக்கிறேன்., ஆமென்.

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

Leave a Reply

Your email address will not be published.