என் பெயர் (ஆண்ட்ரூஸ் ராஜ்) Andrews Raj , நான் சென்னையை சார்ந்தவன், தற்போது கர்நாடகாவில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். என் மனைவியின் பெயர் மேரி பிருந்தா ரோஸ். எங்களுக்கு 2020 ஆண்டு , ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு இரண்டு முறை என் மனைவி கர்ப்பம் தரித்தர்கள், ஆனால் கர்ப்பம் கலைத்து விட்டது. நான் பிறந்தது கிறிஸ்துவ குடும்பமாக இருந்தாலும் , எனக்கு 22 வயதாகும்போது தான் இயேசு கிறிஸ்துவின் அன்பை ருசிக்க ஆரம்பித்தேன். நான் 2016 அம் ஆண்டு கர்நாடகவிற்கு ஆசிரியர் பணிக்காக வந்துவிட்டேன். இங்கு வந்து சில மாதங்களுக்கு பிறகு என் ஆவிக்குரிய வாழ்க்கையில் தொய்வு ஏற்பட்டது. பின்பு லாக்டவுன் சமயத்தில் (2020) JASJEMI youtube சேனல் பார்க்க ஆரம்பித்தேன். அதில் சகோதரிகள் மூலம் பரிசுத்த ஆவியானவர் எனக்கு ஆவிக்குரிய காரியங்களை கற்றுக்கொடுத்தார். நான் திரும்பவும் ஆண்டவரிடம் நெருங்கிவருவதற்க்கு JASJEMI youtube சேனல் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. என் மனைவி கர்ப்பம் கலைந்தது பற்றி பாஸ்டர் சுந்தர் சிங் அய்யாவிடம் ஜெபிக்க சொல்லி கேட்டிருந்தேன். பாஸ்டர் ஜெபம் செய்து எனக்குண்டான தடைகளை பற்றி சொல்லி பின்பு அத்தடைகளை உடைத்தெறிய வழிகளையும் சொன்னார்கள். சங்கீதம் 50:14,15 படி தினமும் ஸ்தோத்திர பலி இடுவது, ஆண்டவருக்காக பாடல்கள் பாடுவது, பொருத்தனை செய்வது மற்றும் தனி ஜெபம் செய்யவேண்டும் என்று சொன்னார்கள். கர்த்தர், பாஸ்டர் மூலமாக சொன்னதை நான் செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் மிகவும் தடைகள் இருந்தது ஆனாலும் செய்ய ஆரம்பித்தேன். இயேசுவின் நாமம் மகிமை படுவதாக. /
2022 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி JasJemi யூடியூப் சேனலில் எனது மனைவி கர்ப்பமாகி 3 மாதங்கள் ஆனதாகவும், கர்த்தராகிய இயேசு எனக்கு செய்த அற்புதத்தைப் பற்றியும் எனது சாட்சியத்தைப் பகிர்ந்துள்ளேன். எனக்கும் என் மனைவி மேரி பிருந்தாவுக்கும் 14 நவம்பர் 2022 அன்று ஆண் குழந்தை பிறந்தது என்பதை இப்போது பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாஸ்டர் சுந்தர் சிங் மற்றும் பாஸ்டர் டைட்டஸ், சகோதரிகள் மற்றும் அனைவரும் எங்களுக்காக ஜெபித்ததற்கு நன்றி. இயேசுவின் நாமம் மகிமைபாடுவதாக.
Praise the lord sisters .plsss pray for me. I am 31 years old.l have a confusion about my marriage. So plsss pray for me