என் பெயர் பியூலா., அசாம் மாநிலம், கடந்த ஜனவரி மாதம் ஒரு மூன்று நாட்களாக எனக்கு அதிகப்படியான பிசாசின் போராட்டங்களால் நெருக்கபட்டு மரணப் படுக்கையில் இருந்தேன். எனக்கு விரோதமாக மந்திரவாதங்களால் என்னை 24 மணி நேரத்திற்குள் கொன்றுவிட வேண்டும் என சிலர் நினைத்தார்கள். அன்று காலை முதல் இரவு வரை மரணத்தருவாயில் இருந்தேன். என்னுடைய கணவர், பிள்ளைகள் எல்லாம் மிகவும் கண்ணீருடன் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்., ஆண்டவரிடம் நானும் எனக்கு விடுதலை தாங்க இயேசப்பா என்று ஜெபித்துக் கொண்டிருந்தேன். என்னை மறந்து விட்டீர்களா என்று ஆண்டவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது பாஸ்டர் சுந்தர்சிங் கூறிய வார்த்தை எனக்கு நினைவுக்கு வந்தது., ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் இறங்கும், உங்கள் மேல் இருக்கிற கட்டுகள் எல்லாம் அவிழ்ந்து போகும், அந்த நாளுக்காக காத்திருங்கள் என்று., அந்த வார்த்தையை நம்பி நான் விசுவாசத்துடன் காத்திருந்தேன். ஆண்டவருக்கு மட்டுமே மகிமை உண்டாவதாக அன்று இரவு கர்த்தருடைய வல்லமையுள்ள கரம் என்னைத் தொட்டு பயங்கரமான விடுதலையைத் தந்தது. பிசாசின் தந்திரங்கள் எல்லாம் ஆண்டவர் நிர்மூலமாக்கினார். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஆண்டவர் என்னை அபிஷேகத்தினால் நிரப்பினார். என்னுடைய கட்டுகள் எல்லாம் அவிழ்ந்தது. கர்த்தருடைய பரிசுத்த நாமம் மட்டுமே மகிமை படுவதாக, எனக்காக ஜெபித்த உங்களுக்கும், உங்களுடைய ஊழியத்தில் உள்ள அனைவருக்கும் மனமார்ந்த நன்றி . கர்த்தருடைய நாமதிற்கு கோடி கோடி நன்றி., ஆமென்.