என் பெயர் சுபா., நான் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறேன். என் வயது 21. நான் முதலாவதாக JASJEMI யூடியூப் சேனலின் மூலமாக இச்சையிலிருந்து விடுபடுவது எப்படி என்ற வீடியோ மூலம் பார்க்க ஆரம்பித்தேன். வாலிபப் பிராயத்தில் உள்ள எனக்கு அது மிகவும் பிரயோஜனமாக இருந்தது. அதன் பின்பு SUBSCRIBE செய்து ஒவ்வொரு வீடியோவாக பார்க்க ஆரம்பித்தேன். பெருமையை மேற்கொள்ள வழிகள்., பிறரை மன்னிப்பது போன்ற அனேக காரியங்களை நான் இந்த சேனல் மூலம் தெரிந்து கொண்டேன். கடந்த ஒரு மாதமாக வெளியிட்ட திருமண ஆயத்தமாதல் வகுப்புகள் அனைத்தும் மிகவும் பிரயோஜனமாக இருந்தது. அதன் பின்பு நான் டைப்ரைட்டிங் தேர்வில் முதல் முறை தோல்வியடைந்த நிலையில், இரண்டாம் முறை டைப்ரைட்டிங் மற்றும் கம்ப்யூட்டர் ஆகிய இரு தேர்வுகளை எழுதி Result காக நான் காத்துக் கொண்டிருந்த நிலையில் மிகவும் பயந்தேன். இந்த முறையும் தோல்வி வந்துவிடுமோ என்று ஆனால் ஜூன் 1,2022 அன்று நீங்கள் “இரட்டிப்பான நன்மையைத் தருவேன்” என்று வாக்குத்தத்த வசனம் அனுப்பினீர்கள். அதேபோல் இரு தேர்வுகளிலும் வெற்றி தந்தார் நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து. எனக்காக ஜெபிக்க கூறியபோதெல்லாம் எனக்காக ஜெபித்ததற்காக நன்றி. இன்னும் என்னுடைய எதிர்காலத்திற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். நானும் உங்கள் ஊழியத்திற்காக ஜெபித்து கொள்கிறேன். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்.