என்னுடைய பெயர் ஜான் நான் மதுரையில் வசிக்கிறேன். சில வருடங்களாக என்னுடைய வாழ்க்கையில் அநேக போராட்டங்கள், பிரச்சனைகள் இருந்தது. இந்த வருடம் பிப்ரவரி மாதம் 13ம் தேதி இயேசு முன்செல்கிறார் ஊழியங்களை தேவன் காண்பித்தார். நான் பாஸ்டர்.சுந்தர் சிங் அவர்களிடம் ஜெபம் செய்து ஆலோசனை பெறுவதற்காக இயேசு முன்செல்கிறார் சபைக்கு சென்றேன். எனக்கு ஜெபம் செய்து என்னுடைய வாழ்க்கையில் இருந்த செய்வினை கட்டுகள், பில்லி சூனிய கட்டுகள், மற்றும் சாப கட்டுகள் மாறுவதற்காக ஆலோசனை கொடுத்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முழு மனதுடன் துதித்து பாட சொன்னார்கள். ஒரு மாதத்திற்குள் உங்கள் சூழ்நிலைகள் மாறும் என்று சொன்னார்கள். நானும் ஆண்டவரை துதித்து, ஸ்தோத்திரம் செலுத்தினேன். இருபது நாட்கள் கழித்து, ஆண்டவர் மற்றொரு போதகரை எழுப்பி எனக்கு ஜெபிக்க உதவி செய்தார். என்னுடைய துதியினாலும், தேவ ஊழியர்களின் ஜெபத்தினாலும் என் வாழ்க்கையில் இருந்த எல்லா செய்வினை கட்டுகள், பில்லி சூனிய கட்டுகள், மற்றும் சாப கட்டுகள் விலகுவதை நான் நன்றாக உணர்ந்தேன். எனக்கு காலில் உள்ள எலும்பு அடிக்கடி வலிக்கும், அதனால் நான் பெல்ட் அணிந்து கொண்டுதான் வாகனம் ஓட்டுவேன். இதனால் நான் வாகனங்கள் சரியாய் ஓட்ட முடியாத சூழ்நிலைகள் இருந்தன. எனக்காக ஜெபித்த பிறகு என்னுடைய எல்லா கட்டுகளையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து விலக்கி பரிபூரண சுகம் தந்து விடுதலை கொடுத்தார். இப்பொழுது நான் ஆண்டவர் கிருபையால் நன்றாக இருக்கிறேன். எனக்காக ஜெபித்த பாஸ்டர் மற்றும் இயேசு முன்செல்கிறார் ஊழியத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி. கர்த்தர் இந்த ஊழியத்தை வல்லமையாக பயன்படுத்தி ஆசீர்வதிப்பார்.. ஆமென்..