கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக., என் பெயர் சாந்தி., என் கணவர் பெயர் பீட்டர் மணி., நாங்கள் பெங்களூரில் வசிக்கிறோம். என் கணவருக்கு மார்ச் மாதம் 2022 உடல் நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனை சென்று பார்த்தோம். என் கணவருக்கு சிறுநீர்ப்பை வீங்கி (bladder swollen) மிகவும் பாதிக்கப்பட்டார். உடனே ஆபரேஷன் செய்து கட்டியை எடுத்தார்கள். பிறகு இரண்டு வாரம் கழித்து கட்டியை சோதனை செய்த ரிப்போர்ட் வந்தது., அதில் என் கணவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் (prostate cancer) என்று வந்தது. நாங்களும் குடும்பமாக வேதனைப்பட்டோம்., மரண இருள் என்று சொல்வார்கள் அதை நான் அன்று தான் உணர்ந்தேன்., தினமும் கண்ணீரோடு விரக்தியோடு நாட்களை கழித்தோம்., சரீரத்தில் பெலன் இல்லை., நாங்கள் பெங்களூரில் வசிப்பதால், சென்னையில் வசிக்கும் என் குடும்பத்தார் அடிக்கடி இங்கு வர முடியாத நிலை. அதனால் என் கணவரை கவனித்துக் கொள்ளவும், வீட்டு வேலை செய்யவும் பெலன் இல்லை. இந்த நேரத்தில் JASJEMI YouTube சேனலை பார்த்தேன். அவர்களுடைய வார்த்தை என்னை பலப்படுத்தியது., உடனே பாஸ்டர் சுந்தர் சிங் ஐயா அவர்களுக்கு போன் செய்து என் கணவருடைய உடல்நிலை குறித்து சொன்னேன். பாஸ்டர் ஐயா, கர்த்தருடைய வார்த்தை மூலம் எனக்கு விசுவாசத்தை கொடுத்தார். இயேசுவின் இரத்தம் உங்கள் கணவரை சுகமாக்கும் என்று என்னை தைரியப்படுத்தினார்., அந்த நாளிலிருந்து கர்த்தருடைய கரத்தில் என் கணவரை முழுவதும் ஒப்புக்கொடுத்துவிட்டேன். நான் மட்டும் தான் என் வீட்டில் கர்த்தரை விசுவாசிக்கிறேன். என்னுடைய கணவரிடத்தில் கர்த்தருடைய வார்த்தையை சொல்லி நம்பிக்கையை கொடுப்பேன். பாஸ்டர் ஐயா எனக்கு ஒரு தகப்பன் போல் சொல்லுவார்., பயப்படாதீர்கள் தைரியமாக இருங்கள், ஆண்டவருடைய இரத்தம் வல்லமையாக வெளிப்படும்., அற்புதம் நடக்கும், நம்பிக்கையாக இருங்கள் என்று கர்த்தர் இந்த தேவ ஊழியர் மூலம் எங்களை பெலப்படுத்தினார். ஐந்து மாதம் கழித்து ஸ்கேன் செய்தோம். என் தேவன் சகலத்தையும் நன்மையாக மாற்றினார். என் கணவருக்கு இருந்த சிறுநீர்ப்பை வீக்கம் (bladder swollen) பாதிக்கப்பட்ட அதே இடத்தில் என் தேவன் அற்புதமாய் சுகம் தந்து அந்த கேன்சரை முற்றிலுமாய் அற்றுப்போக செய்து புதிய (bladder) சிறுநீர்ப்பையை என் தேவன் என் கணவருக்கு தந்து விட்டார். டாக்டர் உங்கள் கணவர் பீட்டர் மணி அவர்கள் நல்ல சுகமாகி விட்டார் என்று சொன்னார்கள். என் கர்த்தர் இந்த வார்த்தையை டாக்டர் மூலம் சொல்லி இருக்கிறார். எங்களுக்காக ஜெபித்த பாஸ்டர் ஐயா குடும்பத்திற்கு நன்றி செலுத்துகிறேன். கர்த்தரை முழுவதுமாக நம்புங்கள். அவர் நம்பிக்கையை கனப்படுத்துவார். அதற்கு என் வாழ்க்கை சாட்சி. நான் பெற்ற இந்த நன்மையை மற்றவர்களும் பெற்றுக் கொள்ள வேண்டும். என் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். இன்னும் என் வாழ்க்கையை கர்த்தர் சாட்சியாக நிறுத்துவார்., அற்புதங்களை நடத்துவார். கர்த்தர் ஒருவருக்கே துதி, கனம், மகிமை உண்டாவதாக ஆமென்.