இரட்சிப்பு

இரட்சிப்பு என்றால் நம்ம போய்க்கொண்டிருக்க பாதைல ஆண்டவர ஏற்றுக்கொண்டு அப்படியே திரும்பி போறது.

“ஒரு திருப்புமுனை”

முன்னால இருந்த நண்பர்கள் முன்னால பண்ணிட்டு இருந்த பழக்க வழக்கங்கள் நாம முன்னால பேசின பேச்சுக்கள் எல்லாவற்றையும் அப்படியே திருப்பி கொண்டு வருதல் முன்னால நீங்க அதிகமா நண்பர்கள் கூட பேசிக்கொண்டு இருந்திருப்பீங்க, ஆனா இரட்சிக்கப்பட்ட பின்பு அதிகமாக ஜெபத்துல உட்காருங்க ஆண்டவரோடு பேசணும்னு ஆர்வமாய் வந்து ஜெபிப்பீங்க,

முன்னால வந்து TV , SERIAL, விளையாட்டு இதெல்லாம் பாத்துட்டு இருந்திருப்பீங்க, முன்னால உங்களுக்கு ஒரு அதிகாரம் கூட பைபிள் படிக்க பிடிக்காம இருக்கும்,ஒரு ஆர்வம் இல்லாம இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை சபைக்கு கூட போக ஒரு ஆர்வம் இல்லாம இருக்கும், ஏதோ போனுமேன்னு போயிருப்பீங்க. ஒரு ஆர்வம், ஒரு புத்துணர்வு, ஒரு மனமாற்றம், பைபிள் படிக்கணும், ஆண்டவரோடு பேசனும்,நமக்காக ஜெபிக்கணும் மற்றவர்களுக்காக ஜெபிக்கணும் இதன் இரட்சிப்பு.

சினிமா பாடல்கள் கேட்டுட்டு இருந்திருப்போம். ஐய்யோ,ஆண்டவர் பாடல்கள் கேட்போம்னு உணர்ந்து கேட்க ஆரம்பிப்போம். இது எதுவுமே கட்டாயத்தினால வர்றது இல்லை. மத்தவங்க முன்னாடி நடிக்கணும்னு வர்றது இல்ல., இதெல்லாம் உங்களுக்கு தானாகவே வரும். இரண்டாவது அந்த பழைய வாழ்க்கை மேல ஒரு விருப்பம் இல்லாம போயிறும்.

பாவத்தை கண்டாலே ஒரு வெறுப்பு வரும் . பாவம் செய்றவங்கள பாத்த, ஐய்யோ இவங்களும் நம்மள மாறி மாறணுமே என்ற எண்ணம் உங்களுக்கும் அதிகமாக வரும். இவங்களும் எப்படியாவது மாறணும்னு நீங்க ஜெபிக்க ஆரம்பிப்பீங்க. ஆண்டவரே எப்படியாவது இவர்களையும் இரட்சிக்கனும்னு சொல்லி ஜெபிக்க ஆரம்பிப்பீங்க. அவங்ககிட்டயும் இயேசுவை பத்தி சொல்ல ஆரம்பிப்பீங்க, சொல்லணும்னு ஆர்வப்படுவீங்க. ஏன்னா, முன்னாடி குடி போதைல நீங்க இருந்தீங்கன்னு வையுங்களேன், உங்க சம்பாத்தியம் எல்லாமே அந்த பாவத்துக்கே போயிரும். உங்க குடும்பத்துல வந்து ஆசீர்வாதம் இருக்காது. ஆனால் இயேசுவை ஏற்றுக்கொண்டு உங்களுக்கு மனமாற்றம் கிடைக்கும்போது குடி மேல ஒரு வெறுப்பு வரும். வெறுப்பு வரும்போது குடிக்க மாட்டீங்க, அப்ப அந்த பணம் வந்து உங்களுக்கு ஆசிர்வாதமா மாறுது. இப்ப உங்க நண்பர் குடிக்கிறத நீங்க பாக்குறப்ப, ஐய்யோ ஒரு காலத்துல நம்மளும் இப்படித்தான் குடிச்சு சொத்த அழிச்சிட்டு இருந்தோம் இவங்களும் இயேசுவை ஏற்றுக்கொள்ளணும்னு நீங்க அவங்களுக்காக இயேசுவை பத்தி சொல்ல ஆரம்பீங்க.

நான் அடைந்த மாற்றம், எனக்கு கிடைக்க ஆசீர்வாதம் அவங்களுக்கும் கிடைக்கணும்னு நினைப்பீங்க, குடி என்பது ஒரு உதாரணம் தான். எல்லா பழக்கத்துக்குமே இது பொருந்தும். முன்னாடி வந்து அடிக்கடி சண்ட இழுப்பீங்க, அடிக்கடி கோள்மூட்டி விட்றது, பிரச்சனைகளை உருவாக்குகிறது, இது போன்ற சுபாவங்கள் (குணங்கள்) எல்லாம் இரட்சிப்புக்கு பின் மாறும். முன்னாடி பாவம் செய்துவிட்டு குற்ற உணர்ச்சியால் வாதிக்கப்பட்டு இருப்பீங்க, ஆனா இயேசுவை ஏற்றுக்கொண்ட பின்பு பாவத்தின்மேல் ஒரு வெறுப்பு வரும். அப்படியே செய்தாலும் ஆண்டவர்கிட்ட ஒப்புரவாகி மன்னிப்பு கேட்டு, இனிமேல் செய்யாதபடி அவர் இரத்தம் சிந்தினார் அதை முதலாவது நம்ம விசுவாசிக்கணும், இரண்டாவது அறிக்கையிடணும், ஆண்டவரே இதுக்கு முன்னால நான் தவறு பண்ணிட்டேன் உமது பிள்ளையாய் என்னை மாற்றுங்க. நான் எனது பேச்சுகளை நான் முன்னாடி கெட்ட வார்த்தைகளெல்லாம் பேசுவேன். இனிமே நான் அப்படி பேச மாட்டேன், என்னை எப்படியாவது உம்முடைய பிள்ளையாய் மாற்றுங்கன்னு நம்ம ஒப்புக்கொடுக்கும்போது இரட்சிப்பு தருவார்.

ஒரு மீட்பு, காப்பாற்றுதல் வேலை நடக்கிறது., இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து அந்த பழைய பாவ வாழ்க்கையிலே நாம் வாழ்ந்தால் நாம் நேராக நரகத்திற்கு தான் செல்வோம். அதற்கு மாறாக, அவர் எனக்காக சிலுவையில் இரத்தம் சிந்தினார் என்று நாம் அவரை நம்பி அவரிடம் பாவ அறிக்கை பண்ணும் போது நமக்கு மனமாறுதல் நடக்கிறது.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!!

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

1 thought on “இரட்சிப்பு

Leave a Reply

Your email address will not be published.