விசுவாசம்..

அநேக நேரம் தேவன் விசுவாசத்தோடு ஒரு சில விஷயங்களை செய்ய சொல்லுவார்.அதற்கு முதலாவதாக ஒரு முதல் அடி எடுத்து வைக்க வேண்டும்.

1. அற்பமான ஆரம்பம்

அநேகருக்கு பின்னாடி வரக்கூடிய மகிமை / ஆசீர்வாதங்கள் மட்டுமே பிடிக்குமே தவிர, இந்த அற்பமான ஆரம்பம் பிடிக்கவே பிடிக்காது..

விசுவாசத்தில் முதல் அடி எடுத்து வைக்கும்போது ரொம்பவே அற்பமாக தான் இருக்கும். நாம் எடுத்த முடிவு சரி தானா, சரி தானா என்று 1000 முறை மனதில் கேள்விகள் கூட எழும்.ஆனால்,கர்த்தராகிய இயேசு சொல்லி தான் இந்த முடிவை நீங்கள் எடுத்தீர்களானால், நிச்சயமாக இந்த அற்பமான ஆரம்பமும் முடிவில் சம்பூரணமாக மாறும்.

அநேகருக்கு இந்த ஆரம்ப காலத்தில் கஷ்டப்பட பிடிக்காது. இந்த அற்பமான ஆரம்பத்தில் உடல், மனது, ஆவி மூன்றிலும் சோர்வுகள் அதிகளவு வரும். அநேக நேரம் இதை விட்டுவிடலாம், இது ஒன்றும் வேலைக்கு ஆகாது என்று அநேக முறை நமக்கு தோன்றும். பாக்கவே அந்த சூழ்நிலை, அந்த இடம், அந்த தொழில் எல்லாமே ரொம்ப ஒரு மாதிரி அற்பமா இருக்கலாம். துவக்கம் வந்து ரொம்பவே சில நேரம் நல்லா இருக்காது. ஆனால், அதை வைத்து நாம் முடிவு எடுக்க முடியாது. இந்த காலத்தில் நமக்கு அநேகர் உதவிக்கரம் நீட்டுவார்கள் என்று கூட சொல்ல முடியாது. தேவன் மட்டுமே நமக்கு துணை.

இந்த அற்பமான ஆரம்பத்தில் அநேக தடைகள் வரும். அது என்ன என்பது பற்றியும், அதையெல்லாம் எப்படி மேற்கொண்டு ஜெயிப்பது என்பது பற்றியும் இந்த உரைநடையில் விரிவாக பார்க்கலாம். முக்கியமாக கர்த்தர் சொன்ன விஷயத்துக்காக மட்டும் தான் இந்த விசுவாசத்தின் முதல் அடி எடுத்து வைக்க வேண்டும். அநேகர் தங்களுடைய விருப்பத்தின் பேரில் ஏதாவது ஒரு ஆர்வக்கோளாறில் முடிவு எடுத்துவிட்டு தேவன் என்னை ஏன் ஆசீர்வதிக்கவில்லையென்று கேள்வி எழுப்புவார்கள். எனவே, முதலாவது தேவனுடைய வழி நடத்துதல் பேரில் தான் இதை நீங்கள் செய்கிறீர்களாயென்று தெளிவுபடுத்திக்கொண்டு செய்யுங்கள். கர்த்தர் எங்கள் வாழ்க்கையில் நிறைய முறை விசுவாசத்தின் முதல் அடி எடுத்து வைக்க சொல்லியிருக்கார்.அந்த மாதிரி நம்மை முதல் அடி எடுத்து வைக்க சொல்லும்போது,நமக்கு தேவையான அனைத்தும் நம்முடைய கையில் கொடுத்து ஆரம்பிங்கன்னு சொல்ல மாட்டார். தேவையான எல்லாமே இல்லையேன்னு நாம் நினைச்சிட்டே இருந்தோம்னா, இந்த விசுவாசத்தின் முதல் அடியை நம்மால் ஒருபோதும் எடுத்து வைக்கவே முடியாது. ரொம்ப அதிகமான அளவு யோசித்துக் கொண்டேயிருந்தால், இந்த முதல் அடியை ஒருபோதும் எடுத்து வைக்கவே முடியாது.

அநேக முறை இந்த விசுவாசத்தின் முதல் அடி என்பது Puzzle game ல முதல் Card எடுத்து வைக்கிற மாதிரி தான் இருக்கும்.முதல் Card வைக்கும் முன்பே அடுத்த Card என்ன, அடுத்த Step என்னனு தெரியாது. முதல் Card அ வச்சக்கப்பறம் தான் அடுத்து ஒன்னு ஒன்னா எடுத்து வைக்க முடியும். மொத்தமா ஒன்னு ஒன்னா அடுக்கி வைக்காம மனசுல அந்த முழு Picture அ யாராலயும் கண்டு பிடிக்கவே முடியாது. பயமாத்தான் இருக்கும் அடுத்தடுத்து Correct ஆ வருமா எல்லாம்னு. ஆனா,ரொம்ப யோசிக்காம

விசுவாசத்தோடு அந்த முதல் அடி எடுத்து வைக்க முயற்சிக்க வேண்டும். அடுத்ததாக அநேகர் முன்னால் தங்கள் வாழ்வில் நடந்த ஏமாற்றங்கள் காரணமான இந்த முதல் அடியை எடுத்து வைக்க தயங்குகின்றனர். முன்னால் ஒரு வேளை விசுவாசத்தில் முதல் அடி எடுத்து வைத்து, அது முழு தோல்வியில் முடிந்திருக்கலாம். ஈசாக்கு சம்பவத்தில் மூன்று முறை ஏமாற்றம் அடைந்து விடுவார். அதைப்போல் நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து வைத்த ஆசீர்வாதத்தை தொடர்ச்சியாக மனிதர்கள் வந்து அபகரித்திருக்கலாம். ஆனாலும் அவர் அந்த முயற்சியை விடவேயில்லை.

நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான் (ஆதியாகமம் 26:22). தோல்விகள், ஏமாற்றங்கள் வந்தாலும் பரவாயில்லை, நான் விசுவாசத்தோடு முதல் அடி எடுத்து வைப்பேன்னு எடுத்து வைக்கும்போது நம்மால் முடியும். ஒரு வேளை தோல்வி வந்துவிடுமோ, ஏமாற்றம் திரும்பவும் வந்துவிடுமோ என்று யோசித்துக்கொண்டே இருந்தால், ஒரு நாளும் இந்த முதல் அடியை எடுத்து வைக்கவே முடியாது.

அடுத்ததாக, இந்த காரியத்தின் மூலம் எல்லா மக்களையும் திருப்திபடுத்தனும்னு நாம் ஆசைப்பட்டால் கண்டிப்பாக ஆண்டவரை திருப்திபடுத்தாமல் விட்டுவிடுவோம். உங்களுக்கு தேவன் கொடுத்த தரிசனம், முக்கியமா ஆரம்பத்துல நிறைய பேருக்கு புரியாது. அதனால் எல்லாரும் எப்ப சரின்னு சொல்றாங்களோ, இல்லாவிட்டால் அவங்க என்ன சொல்றாங்களோ அத தான் நான் செய்வேன்னு உட்கார்ந்து கொண்டே இருந்தால், ஒரு நாளும் நம்மால் விசுவாசத்தின் அடியை எடுத்து வைக்கவே முடியாது.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!!

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

Leave a Reply

Your email address will not be published.