என் பெயர் ஜெசிந்தா., தென்காசி மாவட்டம். எனக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் இருக்கும் பொழுது குழந்தைக்காக அனுதினமும் ஜெபம் பண்ணிட்டு இருந்தேன். அப்பொழுது ஒருநாள் என் தோழி எனக்காக ஜெபம் பண்ணும்போது அவளுக்கு ஆண்டவர் தரிசனத்தில் என் கையில் ஒரு குழந்தை இருப்பதை காட்டினார். JASJEMI யூடூப்பில் தரிசனத்தை சுதந்தரிப்பது எப்படி என்ற வீடியோ பார்த்தேன். அதைப்பார்த்து சகோதரிகள் சொன்னமாதிரி ஆண்டவர் தந்த தரிசனங்களை பேப்பரில் வரைந்து வைத்து அனுதினமும் ஜெபம் பண்ணினேன். இரண்டு மாதத்திற்கு அப்புறம் கர்த்தருடைய கிருபையினால் நான் கருவுற்றேன். இப்பொழுது எனக்கு 5 மாதம் ஆகிறது. அடுத்து வாக்குத்தத்ததை சுதந்தரிப்பது எப்படி என்று மற்றொரு வீடியோ பார்த்தேன். அதன் மூலமாக ஆண்டவர் என்னோடு பேசினார். ஆண்டவர் எனக்கு வாக்குத்தத்தம் தந்தார். 2021-ல் சகோதரி சொன்னார்கள் டிசம்பர் 31-க்குள் வாக்குத்தத்தை ஆண்டவர் நிறைவேற்றுவார் என்று நான் அதை விசுவாசித்து ஜெபித்தேன். எனக்கு ஆண்டவர் அக்டோபர் மாதத்தில் வாக்குத்தத்ததை நிறைவேற்றி விட்டார். கட்டுகளை உடைக்கும் துதி, அதிகாலை ஜெபத்தின் நன்மைகள், இதுபோன்ற வீடியோக்கள் எனக்கு அனேக பிரயோஜனமாக இருந்தது. உங்களுக்கும், உங்கள் ஊழியத்திற்கும் மனமார்ந்த நன்றி., கர்த்தருடைய நாமம் மட்டுமே மகிமைப்படுவதாக, ஆமென்.
God bless you. கர்த்தருடைய நாமம் மட்டுமே மகிமைப்படுவதாக, ஆமென்.
Please pray for my govt job..going to write tnpsc exam
Enakum testimony solla aasai