ரவிச்சந்திரன். (கோயம்புத்தூர்).

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.. என்னுடைய பெயர் ரவிச்சந்திரன். நான் கோயம்புத்தூர் பட்டணத்தில் வசித்து வருகிறேன். நான் ஒரு வியாபாரத்தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக சில மாதங்களாக ஒரு நல்ல இடத்தில் கடை வாடகைக்கு பார்த்து வந்தேன். சரியான இடத்தில் கடை அமையாத நிலையில் கடந்த 31/03/2021 அன்று பாஸ்டர் சுந்தர்சிங் ஐயா அவர்களிடம் போன் மூலமாக தொடர்பு கொண்டு என்னுடைய சூழ்நிலையை சொன்னேன். அவர் பல நிமிடங்கள் பேசி ஆறுதல் படுத்தினார். அவரிடம் சொன்ன பின் என் இருதயத்தில் இருந்த பாரத்தை இறக்கி வைத்தது போன்று உணர்ந்தேன். நான் வழக்கம்போல தினந்தோறும் என்னுடைய தொழில் வேலையை முடித்துவிட்டு மாலை ஒரு சில மணி நேரம் கடை தேடிக்கொண்டிருந்தேன்.சரியாக 20/04/2021 அன்று காலையில் நான் வீட்டை விட்டு வெளியே வந்ததும் எந்த பக்கம் போக வேண்டும் என்று குழப்பத்துடன் வலது பக்கம் இடது பக்கம் எந்த பகுதிக்கு போக? இன்றும் கடை அமையவில்லையே என்று யோசித்தபடி டூவீலர் அருகில் நின்று கொண்டிருந்தேன். நான் எப்பொழுதும் மாலை வேளையில்தான் கடை பார்த்து வந்தேன். ஆனால் அன்றைய தினம் காலையில் கடை பார்க்கவும் அதுவும் “வலது பக்கமாக போ” என்ற சத்தத்தை தெளிவாக உணர்ந்தேன். வித்தியாசமாக கர்த்தர் நடத்துகின்றார் என்று யோசித்தபடி வலது பக்கமாக கடந்து சென்றபோது நான் எதிர்பார்க்காத இடத்தில் ஒரு கடை வாடகைக்கு கிடைத்தது. அதுவும் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்குள்., கர்த்தருக்கு நன்றி சொன்னேன்.கடை வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. பண தேவைகள் இருந்தபடியால் கடை வேலைகள் தாமதமாக நடந்தது. மறுபடியும் பாஸ்டர் அவர்களுக்கு தெரியப்படுத்தினேன். அவர் கவலைப்பட வேண்டாம் ஜெபிக்கிறோம்., நேர்த்தியாக கர்த்தருக்கு சித்தமான நாட்களில் உங்கள் தேவைகள் சந்திக்கப்பட நாங்கள் உங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறோம் என்றார்கள். அதன் பின் ஒவ்வொரு தேவைகளும் சந்தேகப்பட்டது. கடந்த 27/09/2021 அன்று கடை திறக்கப்பட்டது. (கிருபை டெக்ஸ்டைல்ஸ்) போதகர் முன்னிலையில் தேவப்பிரசன்னதோடு அந்த நாளில் மிகவும் நேர்த்தியாக திறக்கப்பட்டது. என் கண்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. என்னை பார்த்து நீயும், உன் குடும்பமும் கோயம்புத்தூர் பஸ் ஸ்டாண்டில் உடுத்துவதற்க்கு கூட துணி இல்லாமல் பிச்சை எடுப்பதை நான் பார்ப்பேன் என்று சொன்ன மனிதர்களின் கண்களுக்கு முன்பாக என் தலையை உயர்த்திய தேவனுக்கு ஸ்தோத்திரம். “கொஞ்சத்தில் உண்மையாக இருந்தால் நான் உன்னை அநேகத்தின் மீது அதிகாரியாக வைப்பேன்” என்று வாக்குதத்தம் தந்து எனக்காக ஜெபித்த பாஸ்டர் ஜான் டைட்டஸ் அவர்களுக்கும் பாஸ்டர் சுந்தர்சிங் அவர்களுக்கும் இயேசு முன் செல்கிறார் ஊழிய குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மனமார்ந்த நன்றி., என்னை ஆவிக்குரிய வாழ்வில் வளரச் செய்து வருகின்ற JASJEMI சகோதரிகளுக்கு நன்றி. இந்த சாட்சிக்காக நான் கர்த்தரை உள்ளத்தின் ஆழத்திலிருந்து துதிக்கிறேன். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்..

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

Leave a Reply

Your email address will not be published.