என் பெயர் மௌனியா., செங்கல்பட்டு மாவட்டம். நான் கிறுஸ்தவ குடும்பம் தான். ஆனால் உலக பிராகாராமாக வாழ்ந்து வந்தேன். சபையில் ஆராதனை எடுப்பேன் வாலிபர் ஊழியமும் செய்து வந்தேன். ஆனால் முழுமையாக ஆண்டவர்க்கு ஒப்புக்கொடாமல் பாதி கிருஸ்தவளாக வாழ்ந்து வந்தேன். நான் உலகத்தை முற்றிலும் வெறுத்து ஆண்டவருக்காக வாழ்வது இந்த காலத்தில் கடினம் என்று நினைத்தேன். 2019 செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி என் வாழ்கையை பரிசுத்த ஆவியானவர் மாற்றி விட்டார். புது மனுஷியாக உணர்ந்தேன். எது எல்லாம் முன்பதாக செய்யாமல் இருக்க முடியாது என்று நினைத்தேனோ அது அறுவருப்பாக மாறியது. என்னால் டிவி சீரியல், நடன நிகழ்ச்சி, பாடல் பார்க்காமல் இருக்க முடியாது. ஆனால் இப்போது பார்ப்பதே இல்லை. 2020 ஆம் ஆண்டில் இருந்து திருமண தடை இருந்தது. திடீரென அநேக பிரச்சனைகள். அந்த நேரத்தில் தான் JASJEMI YouTube சேனல் பார்க்க ஆரம்பித்தேன். உங்கள் வீடியோ அனைத்தும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. என்னுடைய ஆவிக்குறிய வாழ்கையில் அருமையாய் நடத்தியது. `காத்திருப்பு காலம்’ வீடியோ என்னை மிகவும் தொட்டது. நான் அந்த காலத்தில் தான் இருந்தேன். 2022 ஜூன் 2 அன்று எனக்கு திருமணம் முடிந்தது. அந்த நேரத்தில் தான் நீங்கள் திருமண ஆயத்த வீடியோ போட்டீர்கள். அதுவும் மிகவும் பயன்பட்டது. இரண்டரை ஆண்டு நடந்த அனைத்து சாட்சிகளையும் சொல்வதற்கு நேரம் போதாது. அவளோ அழகாக உங்கள் வீடியோ மூலமாக ஆண்டவர் நடத்தினார். என் திருமணத்திற்கு 3500 நபர்களுக்கு மேல் வந்தார்கள். அனைவரும் ஆச்சரியபடும் வண்ணம் ஆண்டவர் நடத்தினார். ஒரு குறைவும் இல்லை. உணவை மீதம் எடுக்க செய்தார். இப்போது அரசு வேலைகாக காத்து இருக்கிறேன். ஆனால் சூழ்நிலை எதிராய் இருக்கிறது. இப்போதும் நீங்கள் போட்ட `கிரீடம்’ மற்றும் `வெற்றிப்பதக்கம்’ (trophy) வீடியோ என்னை விசுவாசிக்க செய்தது. நீங்கள் போடுகின்ற வீடியோ அனைத்தும் எனக்காகவே ஆண்டவர் என்னோடு பேசுவது போல் உள்ளது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.. ஆமென்.