என் பெயர் ஜெனிபர்., தூத்துக்குடி மாவட்டம்., என்னுடைய அப்பாவிற்கு கடந்த மார்ச் மாதம் 2022 திடீரென இடது கை மற்றும் கால் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் மூன்று நாட்கள் ICU வில் அனுமதிக்கப்பட்டார்கள். பரிசோதித்த மருத்துவர்கள் அப்பாவுடைய இடது மூளை பகுதியில் அடைப்பு ஏற்பட்டு அதில் ரத்தக் கசிவு இருப்பதாக கூறினார்கள். மிகுந்த மனவேதனையான சூழ்நிலையில் இயேசு முன் செல்கிறார் ஊழியத்தின் போதகர் ஐயாவிடம் போனில் தொடர்பு கொண்டு ஜெபித்தேன். அவர்களும் ஜெபித்து ஆறுதலான தேவனுடைய வார்த்தைகளை கூறி தொடர்ந்து ஜெபித்துக் கொள்கிறேன் என்றார்கள். எங்களுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது நாங்களும் அப்பாவுடைய சுகத்திற்காக குடும்பமாக ஜெபித்தோம். கர்த்தர் ஜெபத்தை கேட்டு 10 நாட்களுக்குள்ளாக அற்புதமான சுகத்தை கொடுத்தார். இப்பொழுது அவர்களாகவே எல்லா வேலைகளையும் செய்யவும், அலுவலகத்திற்கு வாகனத்தில் செல்லவும், நன்றாக நடக்கவும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கிருபை செய்தார். தற்போது பரிசோதித்த மருத்துவர்கள் நல்ல முன்னேற்றம் உடல்நிலையில் ஏற்பட்டு இருப்பதாக கூறினார்கள் . சுகம் கொடுத்து நடக்கச் செய்த கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள். என் அப்பாவின் சுகத்திற்காக ஜெபித்து வேண்டுதல் செய்த போதகர் ஐயாவுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் மிகுந்த நன்றிகள். கர்த்தர் அவர்களையும், அவர்கள் ஊழியத்தையும் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக. JASJEMI YouTube சேனல் மிகுந்த பிரயோஜனமாக இருந்து வருகிறது. சேனல் ஊழியத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக., ஆமென். கர்த்தர் இந்த சாட்சியின் மூலம் அநேகரை சந்திப்பாராக..
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
இந்த youtube சேனல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில நான் வளர்வதற்கு உங்களுடைய சேனல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது சகோதரி மிக்க நன்றி இது போன்ற இன்னும் அநேக தேவ செய்திகளை நீங்கள் தர வேண்டும் உங்களுடைய ஊழியம் இன்னும் அதிகமாக வாழ வேண்டும் என்று கர்த்தருக்குள்ளாக உங்களை வாழ்த்துகிறேன்.
Super beautiful message