என்னுடைய பெயர் கங்கா சுகந்தி., அரக்கோணம்., நான் 7 மாத கர்ப்பமாக இருக்கும் போது உங்களிடம் ஜெபிக்க சொல்லி நான் ஜெபக்குறிப்பு அனுப்பினேன். நல்லபடியா எனக்கு ஆண்டவர் ஒரு ஆண் குழந்தையை கொடுத்தார். (பால் சாலமன்) கர்த்தர் எனக்கு ஒரு ஆண் மகன் தருவார் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. நான் வீட்டீல் இருக்கும்போது உறவினர்கள் எல்லாம் வந்து குழந்தை சரியா பாக்க மாட்டேங்குறான் சரியா திரும்பவே மாட்டேங்குறானே அப்படி எல்லாம் சொல்லும்போது கொஞ்சம் எனக்கு கஷ்டமாகவே இருந்தது. என் மகனை டாக்டரிடம் கூட்டிட்டு போய் பார்த்தோம். அவரும் சரி ஒரு தடவை நீங்கள் சென்னையில இருக்குற ஹாஸ்பிடல் போய் செக் பண்ணிட்டு வந்துருங்கன்னு சொன்னார்கள். மறுபடியும் உங்களிடம் நான் ஜெபக்குறிப்பு அனுப்பினேன். என் மகனுக்கு தைராய்டு பரிசோதனை செய்தார்கள்.. அதில் ஒன்றும் இல்லை என்று சொன்னார்கள். நான் ஜெபக்குறிப்பு அனுப்பின இரண்டு நாட்களுக்குள் என் மகன் நல்லபடியாக சிரித்தான்., நான் கூப்பிடுகிற பக்கமெல்லாம் திரும்பி பார்த்தான். இனி பயப்பட தேவையில்லை என்று டாக்டர் என்னிடம் சொன்னார்கள். இது எல்லாமே ஆண்டவரோட கிருபை தான். எங்களுடைய ஜெபம் மட்டுமல்லாமல்., நீங்களும் எங்களுக்காக ஜெபித்ததற்காக நன்றி ஐயா., கர்த்தருடைய பரிசுத்த நாமம் மட்டுமே மகிமைப்படுவதாக., ஆமென்.