எஸ்தர் (சென்னை).

கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம். அவருடைய நாம மகிமைக்காக ஒரு சாட்சி சொல்கிறேன். என் பெயர் எஸ்தர்.நான் ஒரு கிறிஸ்தவ பெண். என் கணவரும் கணவர் வீட்டில் உள்ளவர்களும் இரட்சிக்கப்படாமல் இருக்கிறார்கள் . நான் சில மாதங்களாக JasJemi சேனலை தொடர்ந்து பார்த்து வருகிறேன். நான் சென்னையில் வசிக்கிறேன். எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். இரண்டாவதாக என்னுடைய மகன் வயிற்றில் இருக்கும் போது எனக்கு பிரஷர்(pressure)அதிகமானது. உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆஸ்பத்திரியில் இருந்தவர்கள் எல்லாரும் பிரஷர் வந்தால் வலிப்பு வரும்(fits), மூளை நரம்பு வெடித்து விடும் என்று சொல்லிய எதிர்மறையான வார்த்தைகளால் எனக்குள் பயம் வந்துவிட்டது. அதிலிருந்து என்னால் சரியாக தூங்க முடியாது, ஜெபிக்க முடியாது,பிள்ளைகளைக் கூட சரியாக கவனிக்க முடியவில்லை. தலைவலி வந்தால்கூட மூளை நரம்பு வெடித்து விடுமோ என்று நினைக்கும் அளவுக்கு அதிகமான பயம் என்னை சூழ்ந்து கொண்டது.சில நாட்களாக போராட்டமாக இருந்தது. அந்த சமயத்தில் எனக்கு பயமாயிருக்கிறது ஜெபித்துக் கொள்ளுங்கள் பாஸ்டர் என்று பாஸ்டரிடம் கூறினேன். பாஸ்டர் சுந்தர்சிங் அவர்களும் எப்படி அந்த பயத்தை மேற்கொள்ளலாம் என்று எனக்கு ஆலோசனை கொடுத்தார்கள். வேத வசனத்தை அறிக்கை செய்யும் பொழுதும்,அவரை துதிக்கும் பொழுதும், அவரை முழு இருதயத்தோடு பாடும் பொழுதும் நமக்கு இந்த பயங்கள் எல்லாம் போகும் என்று என்னிடம் சொன்னார்கள். அதேபோல எனக்கு அதிகமாக பயம் வரும் போது இயேசு அப்பாவுக்கு ஸ்தோத்திர பலிகள் செலுத்தினேன். வேதத்தில் உள்ள வாக்குத்தத்தங்களை என் வாயினால் அறிக்கை செய்தேன். இந்த காரியங்களை நான் செய்யும்போது இயேசப்பா எனக்கு பரிபூரண விடுதலை கொடுத்தார்.ஆண்டவரே எனக்கு இந்த மாதிரியான பயத்திலிருந்து ஒரு விடுதலையே கிடையாதா என்று கண்ணீரோடு இருந்த சமயத்தில் பாஸ்டர் கொடுத்த ஆலோசனை மிகவும் பிரயோஜனமாக இருந்தது. இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை விசுவாசித்து அறிக்கை செய்யும்பொழுது வரும் விடுதலையை என்னுடைய கண்களால் கண்டேன். என் வாழ்நாளில் ஒரு நாளும் அதை மறக்க மாட்டேன் .ஆண்டவர் எனக்கு பெரிய அற்புதத்தையும் விடுதலையும் தந்திருக்கிறார். ஆண்டவருக்கு கோடான கோடி நன்றி. நான் உபத்திரவப்பட்டது நல்லது அதனால் உமது பிரமாணங்களை கற்றுக் கொள்கிறேன் என்ற வசனத்தின்படி கர்த்தர் தமது பிரமாணங்களை எனக்கு கற்றுக் கொடுப்பதற்காக நன்றி செலுத்துகிறேன். முதலில் நான் பயத்தால் கஷ்டப்பட்ட போது என்னால் அதிக நேரம் ஜெபிக்க முடியாது .ஆனால், விடுதலை தந்த பிறகு அதிக நேரம் ஜெபிக்க முடிகிறது எனக்கு ஜெபிக்க கூடிய வரத்தை கர்த்தர் என்னை தந்திருக்கிறார் .தேசத்திற்காகவும் வியாதியுள்ளவர்களுக்காகவும் அனைவருக்காகவும் ஜெபிக்க ஆண்டவர் என்னை ஏவுகிறார். இயேசு முன் செல்கிறார் ஊழியத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. ஆமென்.

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

Leave a Reply

Your email address will not be published.