“பரிசுத்த ஆவியானவர்” பாகம் 1

நம்ம மனிதர்களுக்கு எப்படி emotions இருக்கோ அதே போல பரிசுத்த ஆவியானவருக்கும் “உணர்வுகள், உணர்ச்சிகள்” இதெல்லாமே அவருக்கும் இருக்கிறது. “பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதீர்கள்” அவருக்கு பிடிக்காததை செய்யும் போது அவர் மிகவும் துக்கப்படுகிறார்.

அவரை நாம் கண்டுகொள்ளாமல் நம்முடைய வேலையே பார்த்துக்கொண்டிருந்தால் நம்முடைய வாழ்க்கையை விட்டு விலகிப்போவார். இப்போ உதாரணத்துக்கு நம் வீட்டிற்கு ஒரு Guest வந்துருக்காங்கனு வைத்துக்கொள்வோம், அவங்கள உக்கார வச்சிட்டு நம்ம பாட்டுக்கு நம்ம வேலையை பார்த்தா அவங்க என்ன பண்ணுவாங்க, அவங்க கண்டிப்பா கொஞ்சம் நேரம் பாப்பாங்க, அப்புறம் எந்திருச்சு போயிருவாங்க. இதே மாதிரி தான் ஆவியானவரையும் கண்டுகொள்ளாமல் விட்டால் இதான் நடக்கும். ஒருவேளை நீங்க நினைக்கலாம், மனிதர்களை நம்மால் பார்க்க முடியும், ஆவியானவருக்கு நான் எப்படி மரியாதை செலுத்துவது என்று. காலையில் எழும்போது, ஜெபிக்கும்போது “ஆவியானவரே, இந்த நாள் முழுவதும் என்னை நடத்துங்க”ன்னு ஒவ்வொரு நாளும் அவரை நாம் நம்முடைய வாழ்க்கைக்குள் வரவேற்க வேண்டும்.

பரிசுத்த ஆவியானவரை, நீங்க தான் என்னை நடத்தனும் என்று அனுதினமும் அவரை வரவேற்க வேண்டும் . நாம் அவரை வரவேற்காமல் அவர் வரவே மாட்டார். ஒரு வேளை இதுவரை பரிசுத்த ஆவியானவர் உங்கள் வாழ்க்கையில் இல்லாதது போல நீங்கள் உணர்ந்திருக்கலாம். இல்லாவிட்டால் அவரை அந்தளவுக்கு பொருட்படுத்தாமல், அந்த அளவுக்கு ஒரு உறவில்லாமல் வாழ்ந்திருக்கலாம். இன்றைக்கு நீங்கள் ஜெபத்தில் போய் ஆவியானவரே, நீர் என் வாழ்க்கையில் வாரும். நான் என் முழு மனதோடு வரவேற்கிறேன். நீர் எனக்கு அவசியம் தேவை. உம்முடைய வழிநடத்துதல், உம்முடைய ஆலோசனைகள் எனக்கு கட்டாயம் தேவை. நீர் துக்கப்படும் விதத்தில் நான் நடக்கமாட்டேன். என்னால் இந்த வாழ்க்கையை என் சொந்த முயற்சியால், என் சொந்த ஞானத்தால், பெலத்தால், திறமையால் வாழவே முடியாது. எனக்கு உங்கள் தேவை என்று அவரை நாம் அழைக்க வேண்டும். முதல் துவக்கத்திலேயே ஒரு வேளை ஆவியானவர் வந்து விட்டாரா இல்லையா என்று தோணலாம். ஆனால், தொடர்ந்து அதிக நேரம் ஜெபத்தில் காத்திருக்கும் பொது ஆவியானவருடைய தொடுதலை உங்களால் உணர முடியும். ரொம்ப simple a சொல்லனும்னா, நம் வீட்டு உறுப்பினர்கள் சில நேரம் வாய் விட்டு பேசாட்டியும், அவர்கள் முக பாவனைகளை வைத்து அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அதே வெளியில உள்ள ஆட்களுக்கு புரியாது, நமக்கு மட்டும் வாய்விட்டு பேசாமலே எப்படி புரிகிறது என்றால், நாம் அவர்களோடு பல வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். “அதிகமான நேரங்கள் ஒன்றாக நேரம் செலவழித்துள்ளோம்”. நாம் எந்த அளவுக்கு ஆவியானவரோடு ஜெபத்தில் நேரம் செலவழிக்கிறோமோ அந்த அளவுக்கு ஆவியானவருடைய சத்தத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். ஒரு Friend கிட்ட பேசுவது போல் நாம் மணிக்கணக்கில் ஆவியானவருடன் பேசலாம். உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்தையும் அவரோடு Share பண்ணலாம். துவக்கத்தில் ஒரு வேளை நீங்கள் இந்த மாதிரி பேசும் போது, நீங்கள் தனியாக பேசுவது போல் ஒரு உணர்வு இருக்கலாம். ஆனால் போக போக ஆவியானவருடைய பிரசன்னத்தை உங்களால் நன்கு உணர முடியும். நாம் சொல்லுவதை எல்லாம் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று நிச்சயமாய் நம்ப ஆரம்பிப்போம்.

பரிசுத்த ஆவியானவர் நமக்காக ஏங்குவார் அவருடன் நெருங்கி வாழவேண்டும் என்று ஆசைப்படுவார்.,

ஆண்டவர் நம்மை இந்த உலகத்தில் படைத்ததே அவருடன் உறவாக, சொந்தமாக இருக்கத்தான். ஆனால் நாம் மற்ற மாம்சமான அழிந்து போகின்ற மனிதர்கள் என்மேல் அன்பு செலுத்தவில்லை என்று அனுதினமும் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறோம்.

நம்முடைய அன்புக்காக ஏங்குகின்ற அன்பு ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு இருக்கும் போது இனி நமக்கு என்ன கவலை என்கின்ற ஒரு உற்சாகம் வரும். நாமும் அவருடன் நெருங்கி அன்பு கூறும்போது இந்த உலகத்திற்கு மேலாக ஒரு பரிசுத்த, உண்மையான அன்பை முழுநிச்சயத்துடன் பெற்றுக்கொண்டு அவருக்குள் எப்போதும் சந்தோஷமாக வாழலாம்., நாம் பாவம் செய்யும் போது சிறு குழந்தை போல அழுவார். என் பிள்ளைகளே, என் மகனே, என் மகளே நான் இல்லாமல் உன்னால் ஒன்றுமே செய்யமுடியாது., இந்த பாவ வாழ்க்கையை விட்டு என்னிடத்தில் வந்து விடு என்று மிகவும் ஆசைப்பட்டு ஏங்குவார். பரிசுத்த ஆவியானவர் நம்முடன் கூட இருக்கும் போது எல்லா சூழ்நிலைகளையும் வெற்றி பெறுவதுற்கு பெலன் தருவார். வியாதிகளை நமக்குள் அனுமதிக்க மாட்டார். எப்போதும் நம்மை சோர்ந்து போகவிடமாட்டார். நான் உன்னுடனே கூட இருக்கிறேன் என்று நாம் எங்கு சென்றாலும் ஆறுதலின் தேவனாக கூடவே வருவார்., மனிதர்கள் நம்மை கைவிட்டாலும் ஏன் இந்த உலகமே நம்மை கைவிட்டாலும்., எப்போதும் கைவிடாத அன்பு நேசர் நமக்கு உண்டு.

“ஏவுதல்” அடுத்ததாக ஆவியானவர் நம் வாழ்க்கையில் வரும்பொழுது என்ன நடக்குமென்றால் நம்முடைய இருதயத்தில் “ஏவத்துவங்குவார்”. நம் இருதயத்தில் ஏற்படுகின்ற ஒரு பயங்கரமான அழுத்தம் என்று சொல்லலாம். இதை செய், செய்யாதே, இவங்களுக்கு போய் உதவி செய், அந்த தொழிலை ஆரம்பி, அவங்க கிட்ட மன்னிப்பு கேளு, சமாதானம் ஆகு, இந்த ஊழியத்தை செய், ஊழியத்துக்கு ஒப்புக்கொடு, முக்கியமாக, பாவம் செய்யும்போது இந்த பாவத்தை செய்யாதே, இந்த இடத்தை விட்டு போய்விடு, இங்கிருந்தால் உனக்கு ஆபத்து தான். இப்படி ஏகப்பட்ட அறிவுரைகளை ஒரு நாளைக்கு நாம் நம் இருதயத்தில் கேட்கலாம்.

இதெல்லாம் நாம் அப்படியே கீழ்ப்படிந்து நடந்தால், பெரிய பெரிய ஆபத்திலிருந்து தப்பலாம். இன்னும் ஆவிக்குரிய காரியங்களில் அவருக்குள் வளரலாம்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக..ஆமென்.

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

Leave a Reply

Your email address will not be published.