இருதய காயங்களிலிருந்து எப்படி வெளியே வருவது?

இருதய காயங்களிலிருந்து எப்படி வெளியே வருவது?

நான் இன்னைக்கு எழுத போற இந்த Topic இருதயத்துல வலி, காயங்கள் இதெல்லாம் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். கடந்த காலத்தில் நமக்கு ஏற்பட்ட வலி, ஆறாத காயங்களிலிருந்து எப்படி வெளியே வர்றதுன்னு பாப்போம். பொதுவாக வலிகள், காயங்கள் நம் வாழ்க்கையில் இரண்டு விதத்தில் வருகிறது.

1.மனிதர்கள் மூலமாக,

2.சூழ்நிலைகள் காரணமாக,

1.மனிதர்கள் மூலமாக ஏற்பட்ட வலி, காயங்கள் இதிலிருந்து எப்படி வெளியே வர்றதுன்னு பாப்போம்.

இந்த வலி சில நேரம் தெரிந்த மனிதர்கள் மூலமாக வருகிறது. என்னுடைய வாழ்க்கைய எடுத்துக்கொண்டால் நான் Personal ஆகவும் சரி, நாங்க குடும்பமாகவும் சரி, அநேக வலிகள், காயங்கள் மனிதர்கள்

மூலமாகவந்தது. சில நேரம் அதிகாரங்கள் மூலமாக வரும், நம்மை விட மேலான அதிகாரத்தில் இருப்பாங்க. அதிகாரத்த கையில் வைத்துக்கொண்டு அவங்க நம்மள காயப்படுத்திக் கொண்டே இருப்பாங்க. வேற வழி இல்ல. நம்ம அவங்களுக்கு கீழ்ப்படிந்து தான் ஆகணும்.

ஏன்னா, எந்த மனிதனும் மேலான அதிகாரத்துக்கு கீழ்ப்படியக்கடவன் என்று வேத வசனம் சொல்லுகிறது(ரோமர் 13:1). என் குடும்பத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், கொடுமைகள், பொய் குற்றச்சாட்டு, காரணமில்லாமல் சத்துருக்கள் ஆனார்கள் என்று வேத வசனம் சொல்லுகிறது. அது போல நமக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஆனா, திடீரென்று நமக்கு அவர்கள் எதிரிகளாக மாறி விடுவார்கள். இப்படி பல மனிதர்கள் கொடுத்த வலிகள், பாரங்களை நான் பல வருடங்களாக சுமந்து கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு நாள் ஆவியானவர் என்னோடு பேச ஆரம்பித்தார்.

“நீ எவ்வளவு நாள் இந்த கடந்த கால வலியோடு வாழ்ந்து கொண்டிருப்பாய். உன்னுடைய கடந்த கால வலிகளையும், காயங்களையும் உண்டாக்கியவர்களை நீ மன்னித்துவிட்டால், உனக்கு நான் நல்ல ஒரு நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தருவேன் என்று பேசினார்”. மன்னிப்பு என்பது இயேசு நமக்கு கற்பித்த காரியத்தில் முக்கியமான ஒன்று. ஆனா, ஒரு சில பேரை என்னால் சுத்தமாக

மன்னிக்க முடியவில்லை. பொதுவா நாம் அவங்கள மன்னிக்கலேனா அவங்க பேசின வார்த்தைகள், எந்த நேரத்துல பேசினார்கள், எந்த தேதியில் பேசினார்கள், எந்த தோரணையில் பேசினார்கள், இப்போ Technology நமக்கு வளர்ந்துவிட்டதுனால அவங்க பேசின Records, Screenshots, photos, video proof இப்படி எல்லாமே நம்மால் Proof ஆக வைத்துக்கொள்ள முடியும். இது நம்ம மனதில் ஓடிக்கொண்டே இருக்கும், இப்படி பண்ணிட்டாங்களே, இப்படி பேசிட்டாங்களேன்னு. ஆனா, நான் கடந்த கால வலியிலேயே வாழ விரும்பவில்லை. கர்த்தர் என்னிடம் நான் யாரெல்லாம் மன்னிக்கணும்னு விரல் விட்டு எண்ண சொன்னார். நானும் நினைவுப்படுத்தி, நினைவுப்படுத்தி பார்த்தேன். அப்படியே வாய் விட்டு அவங்க பேர சொல்லி நான் இயேசுவி

ன் நாமத்தினால் இவங்கள மன்னிக்கிறேன்னு சொல்ல ஆரம்பித்தேன். அப்போதும் என் வாழ்க்கைல ஒரு பெரிய மாற்றம் இல்ல. அப்போ ஆவியானவர் சொன்னார் ” உனக்கு எப்பலாம் அவங்க பேசினது ஞாபகம் வருதோ, திரும்ப திரும்ப அவங்கள மன்னிச்சிருன்னு சொன்னாரு.” இது அப்படியே இரண்டு வாரங்கள் போனது. ஆழமான வலி, காயங்கள் பட்ட மனிதர்களுக்கு மட்டுமே இது புரியும், ஒரு சில மனிதர்களை மன்னிப்பது எவ்ளோ கடினமென்று. அதுக்கடுத்து ஆவியானவர் என்னிடம்,

“அவங்ககிட்ட என்ன ஆசீர்வாதம் இல்லையோ அத சொல்லி அவங்கள ஆசீர்வதின்னு சொன்னார்”. இந்த மாதிரி மனிதர்களை மன்னிப்பதே மிகவும் கடினம். ஆனால், அவங்கள ஆசீர்வதிப்பது அதைவிட கடினம். ஆனா, கீழ்ப்படிந்து நான் ஆசீர்வதிக்க ஆரம்பித்தேன். நமக்கு தெரியும் அவங்களுக்கு என்ன ஆசீர்வாதம் இல்லனு. அதெல்லாம் சொல்லி சொல்லி ஆசீர்வதித்தேன். ஒரு பெரிய பாரம் அகன்றது போல் இருந்தது. முக்கியமாக, அவர்கள் பேசின வார்த்தைகளை நான் மறக்க ஆரம்பித்தேன். அவ்வளவு நாள் என் ஞாபகத்தில் திரும்ப திரும்ப வந்தது. ஆனால், மன்னித்து ஆசீர்வதித்தபின்பு அந்த வார்த்தைகள் எல்லாம் மறக்க ஆரம்பித்தது. அது எனக்கு ஒரே நாளில் நடக்கவில்லை.

கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆனது. இது ஒரு Process ன்னு சொல்லலாம். ஆண்டவர் என் இருதயத்தை குணமாக்க ஆரம்பித்தார். அது எப்படி தெரியுமா இருந்தது, ஒரு பேப்பர் ல ஒன்னு வரையுறோம், அத அழிக்கணும்னு ரப்பர் வைத்து அழிக்கிறோம்,ஆனால் அது அழியாமல் இருக்கிறது. ஆனா, ஆண்டவர் வந்து அதை அப்படியே அழித்தது போல் ஒரு உணர்வு. இப்போலாம் அவர்கள் பேசின வார்த்தைகள் சுத்தமா என் ஞாபகத்துல இல்ல, சில பேர் பெயர் கூட மறந்துட்டேன்.

நம்ம இருதயத்துல அதெல்லாம் அழித்ததுபோல, நம்ம கைலயும் ஏதாச்சும் Proof இருந்தா அதையும் Delete பண்ணனும். ஏன்னா, அது இருக்கிறவர நமக்கு வலி இருந்துக்கொண்டே இருக்கும். ஆண்டவரால, நம் வாழ்க்கையில் கிரியை செய்ய முடியாது. இதைப்போல் சூழ்நிலைகளால் வந்த காயங்களிடம் தேவனிடம் வெளிப்படையாக சொல்லி அதிலிருந்து விடுதலை பெற வேண்டும். அதே போல், நம்மை நாமே நாம் செய்த தவறுக்காக மன்னிக்க வேண்டும். சில நேரம் நம்மை நாம் மன்னிக்காவிட்டாலுங்கூட இருதய காயங்கள் வரும் .

கர்த்தர் தாமே இதை படிக்கிற ஒவ்வொருவரின் இருதய காயங்களையும் குணமாக்குவாராக.,

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!! ஆமென்.

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

Leave a Reply

Your email address will not be published.