கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக. என்னை சாட்சியாய் நிறுத்திய தேவனுக்கு ஸ்தோத்திரம்.
என் பெயர் ஷெர்லின் ராஜ். நான் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவன்.நான் தற்போது வெளியூரில் வேலை பார்க்கிறேன். என் மீது அன்புகூர்ந்து கிருபையாக இயேசப்பா அபிஷேகம் கொடுத்தார். ஆனால், அந்த அபிஷேகத்தை சந்தேகப்படும்படியான சூழ்நிலைகளை சத்துரு கொண்டு வந்தான். உனக்குள்ள இருப்பது லூசிபர் ஆவி தான் என்று சத்தம் கேட்டது. அந்த நேரத்தில் “இயேசப்பா எனக்கு மிகவும் குழப்பமாக இருக்கிறது எனக்கு பதில் கொடுங்கள்” என்று அழுது ஜெபித்தேன். என் மனதில் இருந்த சந்தேகத்தை குறித்து நான் விசாரிக்கும்படி எனக்கு இங்கே யாருமில்லை. அதற்கு முன்பு வரை இந்த JasJemi Channel பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. திடீரென்று YouTubeல் நான் ஒரு வீடியோவை தற்செயலாக பார்க்க நேரிட்டது. அதில் நான் கேட்ட கேள்வியே அந்த வீடியோவின் தலைப்பாக இருந்தது. அப்போது ஒரு ஆர்வத்துடன் உள்ளே போய் பார்த்த போது,” நமக்காக இரத்தம் சிந்தின இயேசு கிறிஸ்துவின் நாமத்தை சொல்லி வருகின்ற அபிஷேகம் ஆண்டவர் கொடுக்கிற அபிஷேகம் தான். அதில் சந்தேகப்பட தேவையில்லை” என்று ஒரு வார்த்தை வந்தது. அது எனக்காகவே வந்த வார்த்தையாக இருந்தது. அதற்குப் பின்பு ஒரு நாள், “இயேசப்பா நம்ம கூட பேசுவாரா?” என்று ஜெபித்துக்கொண்டிருந்தேன். அன்று அதே தலைப்பில் வீடியோ வந்தது. எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக நான் தனி ஜெபத்தில் எதற்காக ஜெபித்தேனோ அதுவே அந்த வாரத்தில் செய்தியாக வரும். JASJEMI channel மூலமாக கர்த்தர் என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் பதில் கொடுத்து ஆறுதல் கொடுத்தார். தேவனுக்கு ஸ்தோத்திரம்.உங்களுடைய வீடியோவில் எது பார்த்தாலும் ஆண்டவர் என்னோடு பேசுகிற அனுபவம் தான் எனக்கு வரும். உங்கள் ஊழியங்களை கர்த்தர் இன்னும் பலருக்கு ஆசீர்வாதமாக வைப்பாராக.. என்னை சாட்சியாய் நிறுத்தின தேவனுக்கு ஸ்தோத்திரம். ஆமென். கர்த்தருடைய நாமம் இந்த சாட்சியின் மூலமாக மகிமைப்படுவதாக.!!!