ரவிச்சந்திரன். கோவை

ர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்த சாட்சிக்காக கர்த்தரை நான் ஸ்தோத்தரிக்கிறேன். என்னுடைய பெயர் ரவிச்சந்திரன். கோவை மாவட்டத்தில் குடும்பமாக வசித்து வருகிறோம். நான் கடந்த 04.08.2021 அன்று பாஸ்டர் சுந்தர் சிங் ஐயா அவர்களுக்கு வாட்ஸ்அப் ஆடியோ மூலமாக ஒரு ஜெப விண்ணப்பத்தை தெரியப்படுத்தினேன். எனது சகோதரி சத்தியசீலீ குடும்பத்தில் மிகவும் கடன் பிரச்சனைகளில் சிக்குண்டு தவித்து வருகிறார்கள்., இந்த கடன் பிரச்சனைகாகவும் அவர்கள் குடும்பமாக இரட்சிக்கப்படவும் ஜெபிக்க கேட்டுக்கொண்டேன். அன்றைய தினம் அவர் என்னோடு தொடர்பு கொண்டு கடன் பிரச்சனை எப்படி வருகிறது, நம்முடைய தவறுகள் என்ன என்று தெளிவாக பேசி அதனால் நமக்கு வரும் தீமைகள் பற்றி பேசியது மட்டுமல்லாமல் அதிலிருந்து எப்படி விடுதலையாவது என்று ஆலோசனை கொடுத்தார்கள்.,நான் ஜெபிக்கிறேன் நீங்களும் அக்கா மற்றும் அத்தானுக்காக ஜெபியுங்கள் கண்டிப்பாக இந்த சூழ்நிலைகள் மாறும். கவலைப்பட வேண்டாம்., உங்கள் சகோதரி குடும்பம் முழுவதும் இரட்சிக்கப்பட்டு பரலோகம் வர வேண்டும். நாம் அனைவரும் இணைந்து ஜெபிப்போம். சீக்கிரத்தில் மாற்றம் வரும் என்றார்கள். அவர் ஜெபித்து அந்த நாட்களில் இருந்து இரவு நேரத்தில் சரியாக அத்தான்(ரவிக்குமார்) அவர்களால் தூங்கவே முடியவில்லை. அவர்களது உள்ளத்தில் ஆவியானவர் கிரியை செய்ய ஆரம்பித்துவிட்டார். ஆத்துமா வாதிக்க ஆரம்பித்துவிட்டது. 18.08. 2021 அன்று அத்தான் முடிவெடுத்து விட்டார் இனிமேல் என்னால் வாழவே முடியாது. சமாதானத்தை இழந்து, தூக்கத்தை இழந்து இந்த வேதனையில் வாழ்வதைவிட செத்துப் போய்விட்டால் எல்லா பிரச்சினைக்கும் முடிவு வந்துவிடும் என்று எண்ணியபடி வீட்டிலிருந்து கடந்து சென்று விட்டார்கள்., அன்று மதியம் மணி 3.30 அளவில் செத்து விட வேண்டும் என்று முடிவெடுத்து சரி அந்த நேரத்தில் ஒரு முறை மனைவியுடன் பேசி விடுவோம் என்று எண்ணம் உண்டானபடியால் எனது சகோதரிக்கு அத்தான் போன் போட்டு பேசியபடி ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்துவிட்டார். என்னை மன்னித்துவிடு, நான் சாகப்போகிறேன் என்னால் இனி யாருக்கும் பிரச்சனை இருக்காது என்றபடியே அழுதார். அக்கா பயந்து நடுங்கி ஐயோ அப்படி தவறாக முடிவு எடுத்து விடாதீர்கள்., தயவுசெய்து வீட்டிற்கு வாருங்கள் எங்களை அனாதை போல் விட்டுவிட வேண்டாம் என்று அக்கா அழுததால் அத்தானை கர்த்தர் வீடு திரும்ப கிருபை தந்தார். 14 நாட்களுக்கு முன்பு நான் பாஸ்டர் சுந்தர்சிங் ஐய்யா அவர்களுக்கு இந்த காரியத்தை குறித்து தெரியப்படுத்தாமல் இருந்திருந்தால் அவர்களும் குடும்பமாக பாரத்தோடு கண்ணீரோடு அக்கா அத்தானுக்கு ஜெபிக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் அவர் மரித்துப் போய் இருப்பார். இந்த பாரமான ஜெபத்தை கர்த்தர் கேட்டு இப்பொழுது அத்தானை கர்த்தர் மனம் மாற செய்துவிட்டார்.,தினமும் தனி ஜெபம், குடும்ப ஜெபம் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்., மிகவும் மகிழ்ச்சி நிறைந்த குடும்பமாக கர்த்தர் எங்களை நடத்தி வருகின்றார். இந்த ஆவிக்குரிய மாற்றத்தை தந்தது மட்டுமல்லால் ஜீவனை மீட்டுக் கொடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம். எங்களுக்காக ஆலோசனை தந்து ஆறுதல்படுத்திய பாஸ்டர் சுந்தர்சிங் ஐய்யா அவர்களுக்கும், இயேசு முன் சொல்கிறார் ஊழியம் மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக ஆமென்.

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

Leave a Reply

Your email address will not be published.