ரவிச்சந்திரன் (கோயம்புத்தூர்).

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. என்னை சாட்சியாக நிறுத்திய தேவனுக்கு ஸ்தோத்திரம். என்னுடைய பெயர் ரவிச்சந்திரன். நான் கோயம்புத்தூர் பட்டணத்தில் ஒரு சிறிய கடை வைத்து அதில் வீட்டு உபயோகப் பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளேன். கடந்த 22.3.2021 அன்று இரவு நான் மிகவும் சோர்வுக்குள் உள்ளானேன். கடையில் வியாபாரம் இல்லை,கடன் பிரச்சனை,வாடகை கொடுக்க முடியவில்லை, குடும்பத்தில் நல்ல விஷேசம் சுபகாரியம் தடை இவைகள் அனைத்தும் என் உள்ளத்தை மிகவும் அழுத்தியதால் அவிசுவாசமான வார்த்தைகள் என் உள்ளத்தில் வர நான் இடம் கொடுத்து விட்டேன். நான் என் அம்மாவிடம் சொல்ல ஆரம்பித்தேன். இனி கடை வியாபாரம் நடக்காது, கடன் பிரச்சினை மாறப்போவது கிடையாது, நம் வீட்டில் நல்ல காரியம் நடக்காது என்று சொல்லியபடி மிகவும் சோர்வோடு,கர்த்தாவே போதும் என்னை எடுத்து விடும் என்றேன். அப்படியே சோபாவில் தலையைத் தூக்கியபடி அமர்ந்து இருந்தேன் .அப்பொழுது ஆவியானவர் என்னோடு பேசினார் .உன் அருகில் இருக்கின்ற உனது போனை எடு என்று .நான் போனை எடுக்க முயற்சித்தபோது என்னால் அருகில் இருந்த போன் கூட எடுக்க முடியாதபடி மிகவும் ஆவியில் சோர்வானது. மறுபடியும் போனை எடு என்று ஆவியானவர் பேசினார் .கைகளை மெதுவாக அசைத்து அந்த போனை எடுத்த போது JasJemi அவர்களது ஊழியமாகிய இயேசு முன் செல்கிறார் ஊழியத்தின் மூலமாக போடப்பட்ட Community க்குள் போகும்படி ஆவியானவரால் ஏவப்பட்டேன்.அப்பொழுது தேவனுடைய கிரியை உன் சத்துருக்களின் வாழ்வில் வெளிப்பட போகிறது என்ற தலைப்பில் எழுதப்பட்ட வார்த்தையை பார்த்து அதை வாசிக்கத் தொடங்கியபோது என் மீது ஒருவர் ஆறுதலாக தோளின் மீது கைகளை வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி நான் உணர்ந்தேன். அதை வாசிக்க வாசிக்க என்னை கட்டி வைத்த கரங்கள், கால்கள்,நாவு அனைத்திலும் ஒரு விடுதலையை நான் உணர்ந்தேன்.தேவபெலன் எனக்கு உண்டானது, தேவபிரசன்னம் என்னை நிறைத்தது. உடனே எழுந்துபோய் ஜெப அறைக்குப் போய் ஒரு 30 நிமிடம் ஜெபித்தேன். வெளியே வந்து பாஸ்டர் சுந்தர்சிங் அய்யா அவர்களுக்கு வாட்ஸ்அப் வழியாக தொடர்பு கொண்டு என்னுடைய பிரச்சினையை வாய்ஸ் மூலமாக தெரியப்படுத்தினேன்.அவர் உடனே பதில் அனுப்பினார்.நான் ஜெபித்துக் கொள்கிறேன், கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு இதை குறித்து நான் உங்களுடன் போனில் பேசுகிறேன் என்றார்.அடுத்த நாள் என்னை போனில் அழைத்து சோர்ந்து போகாமல் எப்படி இருக்க வேண்டும் என்று அதை குறித்து அதிக நேரம் பேசினார். மிகவும் ஆறுதலாக இருந்தது.சமாதானம் என்னை நிறைத்தது. அன்று இரவு நன்றாக ஜெபிக்க முடிந்தது.அதற்குப் பின்பு இதுவரைக்கும் அந்த சோர்வும் பெலகீனமும், மரித்துவிட்டால் நலமாக இருக்கும் என்ற எண்ணம் வந்ததே இல்லை. எனக்காக நேரம் எடுத்து ஜெபித்து, ஆலோசனை கொடுத்த பாஸ்டர் சுந்தர் சிங் அய்யா அவர்களுக்கும் பாஸ்டர் ஜான் டைட்டஸ் அவர்களுக்கும் அவர்கள் ஊழிய குடும்பம் அனைவருக்கும் நன்றி. இவர்களை பயன்படுத்தி என்னை முற்றிலும் விடுதலை ஆக்கிய கர்த்தாதி கர்த்தருக்கு துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக.ஆமென் அல்லேலூயா.

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

Leave a Reply

Your email address will not be published.