கிறிஸ்துவுக்குள் பிரியமான இயேசு முன்செல்கிறார் ஊழியர்களுக்கு ஜெபக்கனி எழுதும் அன்பின் கடிதம் நான் திருமணமாகியதும் ரொம்ப பலவீனமாக இருந்தேன். தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டேன். நான் ஏன் வாழவேண்டும் என்று நினைத்து அவ்வளவு கஷ்டப்பட்டு கதறி அழுதேன். தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜெபித்தேன். அதோடு JASJEMI யூடியூப் சேனலில் நீங்கள் பதிவிட்ட “கர்த்தரைத் துதித்ததால் எங்கள் வாழ்வில் நடந்த அதிசயங்கள்” என்ற விடீயோவை கேட்டு தொடர்ந்து ஆண்டவரை துதித்தேன். அன்றைய தினத்திலிருந்து நான் நன்றாக தூங்கினேன். இயேசு கிறிஸ்து என்னுடைய வாழ்வில் நிறைய அற்புதம் செய்தார். கர்த்தர் என் வாழ்வில் ஜெப நேரத்தை அதிகமாக்கினார். அதோடு எனக்கு கர்ப்பத்தின் கனியையும் ஆசீர்வதித்தார். சில நாட்களுக்கு முன்பு டாக்டரிடம் போய் காண்பித்தேன். கர்ப்பம் தரிக்க மருந்து மாத்திரைகளை கொடுத்தார்கள். நான் அதை எடுத்துக்கொள்ளாமல் விசுவாசத்தோடு ஜெபித்து ஒவ்வொரு முறையும் ஸ்கேனுக்கு செல்வேன். கருமுட்டை வெடிக்க வில்லை இந்த முறை நீங்கள் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு இல்லை என்று சொல்லி அனுப்பினார்கள். ஆனால் அதே மாதத்தில் நான் கர்ப்பம் தரிக்க ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கிருபை செய்தார். ஆண்டவரை நான் துதிக்கும் போது என் வாழ்வில் அற்புதம் செய்தார்.. கர்த்தரின் பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக.. ஆமென்..
Please pray formy karpathi kani..marg agi 3 yrs aguthu sister…